நெல்லையில்  புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு;  வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு….!

NELLAI 2 - 2026

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து சென்னை, கோவை, புதுச்சேரி, ஐதராபாத், திருப்பதி, வேலூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர திருநெல்வேலியிருந்து மேலும் பல முக்கிய ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெளியூர்களிலிருந்து வரும் தனியார் பஸ்கள் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையம் அருகே நின்று பயணிகளை ஏற்றி சென்றன.

சமீபத்தில் சந்திப்பு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது.

இதனையடுத்து ஆம்னி பஸ்கள் நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி சென்றன.

இந்த நிலையில் திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கான அறிவிப்பு பலகை அந்த பகுதியில் வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை சில தனியார் ஆம்னி பஸ்கள் அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று சென்றன.

இதுகுறித்து தகவலறிந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இரவு 7 மணி அளவில் அந்த ஆம்னி பஸ் நிறுத்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது. என்றும், இந்த நிலம் தொடர்பான வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இங்கு பஸ்களை நிறுத்தக்கூடாது. அதனால் ஆம்னி பஸ்களை எடுத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனா்.

மாநகராட்சி அறிவிப்பு பலகையை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக ஒரு அறிவிப்பு பலகையை வைத்தனர்.

அதில் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட வில்லை. பின்னர் அதிகாரிகளும், வக்கீல்களும் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, புதிதாக ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்ட இடம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இடத்தில் நீதிமன்ற வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்றுதான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடம் தொடர்பான நீதிமன்ற வழக்கு இருந்தால் என்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories