February 23, 2026, 4:42 AM
25.9 C
Chennai

நெல்லையில்  புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு;  வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு….!

NELLAI 2 - 2026

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து சென்னை, கோவை, புதுச்சேரி, ஐதராபாத், திருப்பதி, வேலூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர திருநெல்வேலியிருந்து மேலும் பல முக்கிய ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெளியூர்களிலிருந்து வரும் தனியார் பஸ்கள் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையம் அருகே நின்று பயணிகளை ஏற்றி சென்றன.

சமீபத்தில் சந்திப்பு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது.

இதனையடுத்து ஆம்னி பஸ்கள் நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி சென்றன.

இந்த நிலையில் திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கான அறிவிப்பு பலகை அந்த பகுதியில் வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை சில தனியார் ஆம்னி பஸ்கள் அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று சென்றன.

இதுகுறித்து தகவலறிந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இரவு 7 மணி அளவில் அந்த ஆம்னி பஸ் நிறுத்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது. என்றும், இந்த நிலம் தொடர்பான வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இங்கு பஸ்களை நிறுத்தக்கூடாது. அதனால் ஆம்னி பஸ்களை எடுத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனா்.

மாநகராட்சி அறிவிப்பு பலகையை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக ஒரு அறிவிப்பு பலகையை வைத்தனர்.

அதில் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட வில்லை. பின்னர் அதிகாரிகளும், வக்கீல்களும் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, புதிதாக ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்ட இடம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இடத்தில் நீதிமன்ற வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்றுதான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடம் தொடர்பான நீதிமன்ற வழக்கு இருந்தால் என்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories