நெல்லையில்  புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு;  வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு….!

NELLAI 2 - 2026

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து சென்னை, கோவை, புதுச்சேரி, ஐதராபாத், திருப்பதி, வேலூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர திருநெல்வேலியிருந்து மேலும் பல முக்கிய ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெளியூர்களிலிருந்து வரும் தனியார் பஸ்கள் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையம் அருகே நின்று பயணிகளை ஏற்றி சென்றன.

சமீபத்தில் சந்திப்பு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது.

இதனையடுத்து ஆம்னி பஸ்கள் நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி சென்றன.

இந்த நிலையில் திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கான அறிவிப்பு பலகை அந்த பகுதியில் வைக்கப்பட்டது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

இதையடுத்து நேற்று மாலை சில தனியார் ஆம்னி பஸ்கள் அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று சென்றன.

இதுகுறித்து தகவலறிந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இரவு 7 மணி அளவில் அந்த ஆம்னி பஸ் நிறுத்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது. என்றும், இந்த நிலம் தொடர்பான வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இங்கு பஸ்களை நிறுத்தக்கூடாது. அதனால் ஆம்னி பஸ்களை எடுத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனா்.

மாநகராட்சி அறிவிப்பு பலகையை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக ஒரு அறிவிப்பு பலகையை வைத்தனர்.

அதில் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட வில்லை. பின்னர் அதிகாரிகளும், வக்கீல்களும் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

அங்கு போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, புதிதாக ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்ட இடம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இடத்தில் நீதிமன்ற வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்றுதான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடம் தொடர்பான நீதிமன்ற வழக்கு இருந்தால் என்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories