ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் புரியும் மொழியில் பேசலாம்!

chennai central railway station - 2026

ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரயில்வே துறையில் பெரும்பாலும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் பணிக்கு விண்ணப்பித்து தேர்வெழுதி சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி மொழி அல்லது தங்கள் தாய் மொழி அறிந்த வடமாநிலத்தவராகவே இருக்கிறார்கள். இதனால் மொழி தெரியாமல் அதிகாரிகளுக்குள் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும், நிலைய மேலாளர்களுக்கும் இடையே மொழித் தொடர்பில் புரிந்துணர்வு இன்மை நிலவுகிறது.

அதே போல், ஹிந்தி மொழி தெரியாத தமிழகம் போன்ற மற்ற மொழி மாநிலங்களில், தொடர்பு மொழி பிரச்னை ஏற்பட்டு, கீழ் நிலை ஊழியர்களில் இருந்து அதிகாரிகள் வரை புரிந்துணர்வு இன்மை ஏற்படுகிறது.

அண்மையில் மதுரை அருகே செங்கோட்டை – மதுரை, மதுரை -செங்கோட்டை இரு பயணிகள் ரயிலும், சிக்னல் தொடர்புக்காக நின்று கொண்டிருந்த போது, ரயில் நிலைய அதிகாரி மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு இடையே மொழிப் பிரச்னை ஏற்பட்டதால், சொல்வதைத் தவறாகப் புரிந்து கொண்டு, ஒரே லைனில் இரு ரயில்களையும் விட்டனர். இதனால் பெரும் பிரச்னை ஏற்பட்டது. அருகே வந்த ரயில்கள் டிரைவர்களின் சாதுரியத்தினால் திடீரென நிறுத்தப் பட்டு, பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில், இதற்கு சரியான தீர்வு குறித்து யோசிக்கும் படி தெரிவிக்கப் பட்டது.

இதனிடையே, ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் – நிலைய மேலாளர்கள் தமிழில் பேசக்கூடாது என்றும், ஹிந்தி, அல்லது ஆங்கிலத்தில் தகவல் தொடர்பை பயன்படுத்துமாறும் தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப் பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதை அடுத்து, தமிழகத்தில் தமிழில் பேசத் தடையா என்று அரசியல் ரீதியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அது தவறுதலாக வந்த உத்தரவு என்றும், அந்த உத்தரவில் மாற்றம் செய்யப் பட்டு வெளியிடுவதாகவும் கூறிய தெற்கு ரயில்வே, ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசலாம் என்று விளக்கம் அளித்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories