ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் புரியும் மொழியில் பேசலாம்!

chennai central railway station - 2026

ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரயில்வே துறையில் பெரும்பாலும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் பணிக்கு விண்ணப்பித்து தேர்வெழுதி சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி மொழி அல்லது தங்கள் தாய் மொழி அறிந்த வடமாநிலத்தவராகவே இருக்கிறார்கள். இதனால் மொழி தெரியாமல் அதிகாரிகளுக்குள் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும், நிலைய மேலாளர்களுக்கும் இடையே மொழித் தொடர்பில் புரிந்துணர்வு இன்மை நிலவுகிறது.

அதே போல், ஹிந்தி மொழி தெரியாத தமிழகம் போன்ற மற்ற மொழி மாநிலங்களில், தொடர்பு மொழி பிரச்னை ஏற்பட்டு, கீழ் நிலை ஊழியர்களில் இருந்து அதிகாரிகள் வரை புரிந்துணர்வு இன்மை ஏற்படுகிறது.

அண்மையில் மதுரை அருகே செங்கோட்டை – மதுரை, மதுரை -செங்கோட்டை இரு பயணிகள் ரயிலும், சிக்னல் தொடர்புக்காக நின்று கொண்டிருந்த போது, ரயில் நிலைய அதிகாரி மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு இடையே மொழிப் பிரச்னை ஏற்பட்டதால், சொல்வதைத் தவறாகப் புரிந்து கொண்டு, ஒரே லைனில் இரு ரயில்களையும் விட்டனர். இதனால் பெரும் பிரச்னை ஏற்பட்டது. அருகே வந்த ரயில்கள் டிரைவர்களின் சாதுரியத்தினால் திடீரென நிறுத்தப் பட்டு, பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில், இதற்கு சரியான தீர்வு குறித்து யோசிக்கும் படி தெரிவிக்கப் பட்டது.

இதனிடையே, ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் – நிலைய மேலாளர்கள் தமிழில் பேசக்கூடாது என்றும், ஹிந்தி, அல்லது ஆங்கிலத்தில் தகவல் தொடர்பை பயன்படுத்துமாறும் தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப் பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதை அடுத்து, தமிழகத்தில் தமிழில் பேசத் தடையா என்று அரசியல் ரீதியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அது தவறுதலாக வந்த உத்தரவு என்றும், அந்த உத்தரவில் மாற்றம் செய்யப் பட்டு வெளியிடுவதாகவும் கூறிய தெற்கு ரயில்வே, ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசலாம் என்று விளக்கம் அளித்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories