December 6, 2025, 10:33 PM
25.6 C
Chennai

புலி பதுங்குவது பாயத்தான் – மு.க.ஸ்டாலின் பேச்சு…!

MK SATALIN 1 - 2025
புலி எப்போதும் பாய்வதற்குத்தான் பதுங்கும். ஓடி ஒளிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

மறைந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி படத்திறப்பு விழா நிகழ்ச்சி விழுப்புரம் கழிஞ்சி குப்பத்தில் இன்று காலை நடைபெற்றது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராதாமணியின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது

ராதாமணி எம்.எல்.ஏ.வின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தி.மு.க.வின் செயல்வீரராக விளங்கியவர் ராதாமணி. அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

சட்டமன்றத்தில் அவர் பேசுகிறார் என்றால், தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க. உறுப்பினர்களும் அவரது பேச்சை கூர்ந்து கவனிப்பார்கள். நகைச்சுவையோடு மட்டுமல்ல, சிந்திக்கக்கூடிய வகையிலும் அவர் பேசக்கூடிய ஆற்றலை பெற்றவர். அந்த ராதாமணி இன்று நம்மிடத்திலே இல்லை.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் அகில இந்திய அளவில் பிரதமர் மோடி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

தி.மு.க.வுக்கு தான் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. உங்களால்தான் அந்த வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களால்தான் அந்த வெற்றி கிடைத்துள்ளது. இதுதான் உண்மை.

தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக, நாம் செய்த பிரசாரங்களை புரிந்துகொண்டு வாக்களித்ததால்தான் இந்த வெற்றியை பெற்று இருக்கிறோம்.

என்னதான் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கிற எல்லோருக்கும் ஒரு குறை இருக்கிறது.

அது என்னவென்றால் இன்னும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறதே? அந்த ஆட்சியை எப்போது போக செய்யப் போகிறீர்கள் என்ற குறை இருந்து கொண்டு இருக்கிறது.

கவலைப்படாதீர்கள். உங்கள் உணர்வு புரிகிறது. நான் இங்கு உறுதியாக சொல்கிறேன்.

மறைந்த ராதாமணி எந்த உணர்வோடு பாடுபட்டாரோ? அந்த பாடுபடும் உணர்வை நாம் பெற்றால் நிச்சயமாக தமிழ்நாட்டில் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்காது.

சட்டமன்ற சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று சட்டசபை கூடிய தினத்தன்று அறிவித்தோம்.

சபாநாயகர் மீது நாம் எதற்காக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொடுத்தோம் என்றால் அப்போதே நான் தெளிவாக சொன்னேன். 3 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க திட்டமிட்டார்கள்.

அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத் தான் கொடுத்தோம்.

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்ற பிரச்சினையை கொண்டு வந்தால் முதலில் அதைத்தான் தீர்த்து வைக்க வேண்டும். 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லாமல் போகும். அதற்காகத்தான் நாங்கள் அறிவிப்பு வெளியிட்டோம்.

நாங்கள் இதை வெளியிட்ட நேரத்திலேயே உச்ச நீதிமன்றமும் அதை புரிந்து கொண்டு, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்துள்ளதால் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை எக்காரணத்தை கொண்டும் பறிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

அதனால்தான் கலைஞர் கற்று தந்துள்ள ராஜதந்திரத்தை நாம் பயன் படுத்தினோம். அதுதான் உண்மை.

ஆனால் ஊடகங்களில் என்ன வருகிறது என்றால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து விட்டு தி.மு.க. பதுங்குகிறது என்கிறார்கள்.

புலி எப்போதும் பாய்வதற்குத்தான் பதுங்கும். ஓடி ஒளிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம். முடிவு கட்ட வேண்டிய நேரத்தில் முடிவெடுப்போம்.

அந்த உறுதியை ராதாமணி படத்திறப்பு நிகழ்ச்சிலேயே அத்தனை பேரும் எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories