December 16, 2025, 9:34 AM
26.4 C
Chennai

அறிவிப்பு வந்து 2 வருடமாச்சு… அந்தியோதயா உதயமாகாமலேயே அந்திமமாச்சு! ஓடாத ரயில் ரத்தான அதிசயம்!

antyodaya train sengottai - 2025சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிகள் மேலும் சில ரயில்கள் தேவை என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகமோ, அறிவிக்கப் பட்ட ஒரு ரயிலை ஒரு சேவை கூட இயக்காமல் அமைதியாக ரத்து செய்துள்ளது. இப்படி அந்திம திசைக்குச் சென்றுள்ளது வேறு ஒன்றும் இல்லை… பயணிகள் ஆவலுடன் அதிகம் எதிர்பார்ப்புடன் கோரி வரும் அந்த்யோதயா ரயில்தான்!

தம்பரம்-செங்கோட்டை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (16189/16190), இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது! இந்த ரயிலின் முக்கிய அம்சமே, இது அறிவிக்கப்பட்ட பயணத் தடம்தான்! மெயின்லைனில் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில், மத்திய மாவட்டங்கள் வழியாகச் செல்லும் வகையில் அறிவிக்கப் பட்டது. மேலும், ஒரு முழுமையான முன்பதிவு செய்யப்படாத ரயிலாக இது அறிவிக்கப்பட்டது பயணிகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

ஆனால், இந்த ரயிலானது மே 10 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில் ரயில்வே நிர்வாகத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் அண்மையில் வெளியாகி, சமூக ஊடகங்களிலும் வைரலானது. இது தென்மாவட்ட பயணிகளுக்கு அதிர்ச்சியாகவே உள்ளது.

இந்த ரயிலைப் போல், சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் (22689/22690) ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களும் பொது நேர அட்டவணையிலும், இந்திய ரயில்வே வெளியிட்ட அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்யோதயா எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு நாளும் தம்பரத்திலிருந்து காலை 7 மணிக்குத் தொடங்கி சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகியவற்றை இணைக்கும் மெயின்லைன் பயணம். இது செங்கோட்டையை அடைய 15.30 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

antyodaya train sengottai1 - 2025ஆனால், தம்பரம்-செங்கோட்டை பிரிவில் ரயிலுக்கான தேவைகள் மற்றும் ஆதரவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், ஏற்கெனவே செங்கோட்டை – சென்னைக்கு தினசரி இரண்டு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும், மற்றொரு ரயில் அண்மையில் வாரம் இருமுறை என்பதில் இருந்து மூன்று முறை என மாற்றப் பட்டது என்கின்றனர்.

ஆனால், இவை இரண்டும் இரவு நேர ரயில்கள், அதுவும் கார்ட் லைன் எனப்படும் மதுரை-திண்டுக்கல் – திருச்சி – அரியலூர் வழியில் இயக்கப் படுபவை என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை. பகல் நேர அந்த்யோதயா ரயிலின் தேவை குறித்தும் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

“அமைச்சர் இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியிட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ரயிலுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த ரயில் 30 நகரங்களில் உள்ள பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும், தற்போது திருநெல்வேலிக்கு இயக்கப் படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் போல் செங்கோட்டை – தாம்பரம் ரயிலும் பிரபலம் அடைந்திருக்கும்…என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

Topics

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

பஞ்சாங்கம் டிச.15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அட இவரா..? பாஜக.,வின் தேசிய செயல் தலைவர் அறிவிப்பு!

பாஜவின் தேசிய செயல் தலைவராக பீஹார் மாநில அமைச்சர் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

Entertainment News

Popular Categories