December 5, 2025, 7:08 PM
26.7 C
Chennai

விபத்தில் சிக்கியவரை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆட்சியர்!

darmapuri collector - 2025

தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தவரை அவ்வழியே சென்ற மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தமது அலுவலக பிஆர்ஓ காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மலர்விழி வந்தார். ஆய்வுகளை முடித்த பின்னர், தருமபுரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காரிமங்கலம் அடுத்த மாரவாடி கூட்டு ரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி சாலை விபத்து ஏற்பட்டு அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்தவர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்து கிடந்தார்.

darmapuri collector1 - 2025விபத்து குறித்து அறிந்த ஆட்சியர் மலர்விழி, விபத்தில் சிக்கியவரை மீட்டு முதலுதவிக்கு ஏற்பாடு செய்ததுடன் அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமாகலாம் என்ற நிலையில், விபத்தில் சிக்கியவரின் ரத்த இழப்பைத் தடுக்கும் வகையில் காயமடைந்த இடங்களில் அரசுப் பணியாளர்கள் மூலம் கட்டுப்போடச் செய்தார். பின்னர் உடன் வந்திருந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் வாகனத்தில் அவரை ஏற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு விரைவாக அனுப்பி வைத்தார்.

விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், விபத்தில் உயிரிழந்தவர் மாட்லாம்பட்டி அடுத்த கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசி(50) எனவும், பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு அனுப்பப்பட்டவர் காரிமங்கலம் அடுத்த பள்ளத்துகொல்லை கிராமத்தைச் சேர்ந்த மாது(55) என்பதும் தெரிய வந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories