May 24, 2025, 11:30 AM
31.8 C
Chennai

பெரியார் திடலில் மதவெறி அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்: வைகோ கண்டனம்

சென்னை: பெரியார் திடலில் தி.க.வினர் தாலியறுக்கும் போராட்டத்தை நடத்தியபோது, இந்து அமைப்பினர் சிலர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது நிகழ்ந்த வன்முறைகளுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், திராவிடர் கழகம் கடைபிடித்து வருகின்ற கொள்கைகளின் அடிப்படையில், அண்ணல் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தது. அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமைகளான கருத்து உரிமை, பேச்சுஉரிமை திராவிடர் கழகத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக் கறி உணவு அருந்தும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டன. தமிழக அரசு காவல்துறை இந்த நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது மட்டும் அன்றி, காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. எனவே, பெரியார் திடலில் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று காலையில் நிகழ்ச்சிகள் தொடங்கி நடத்தப்பட்டன. தமிழக அரசின் மேல்முறையீட்டின்பேரில், உயர்நீதிமன்றம் மற்றொரு உத்தரவு பிறப்பித்ததால், காலை 10 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்று வந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு, திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர். இதற்கு இடையே சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரியார் திடலுக்குள் நுழைந்து வன்முறைத் தாக்குதலில் இறங்கி உள்ளனர். திராவிடர் கழக அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பெரியார் திடலுக்குள் நுழைந்த மதவெறிக் கும்பல் திராவிடர் கழகத் தொண்டர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி அராஜகம் செய்துள்ளனர். தமிழக அரசின் காவல்துறை இந்துத்துவ மதவெறிக் கும்பலைத் தடுத்து நிறுத்தாமலும், பெரியார் திடலுக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய சிவசேனா தொண்டர்களைக் கைது செய்து கடமை ஆற்றாமலும் வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால், தங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த சிவசேனா, இந்துத்துவ வெறியர்களைத் தடுத்த திராவிடர் கழகத் தோழர்கள் மீது , காவல்துறை ஒருதலைபட்சமாக தடியடி நடத்தி இருக்கின்றது. இதில் படுகாயமுற்ற 15-க்கும் மேற்பட்ட திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் வேலூர் சிறையில் அடைத்துள்ள செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது. பெரியார் திடலுக்குள் நுழைந்து மதவெறி கும்பல் தாக்குதல் நடத்த முயன்ற நிகழ்வு மிகவும் கவலை அளிக்கின்றது. தமிழ்நாட்டில் இந்துத்துவ, மதவெறி சக்திகளுக்கு எதிராக, கூர்மையான எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் கழகத் தோழர்களை உடனடியாகத் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். திராவிடர் கழக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சிவசேனா மதவெறி அமைப்புக்களைச் சார்ந்தோரைக் கைது செய்து சிறையில் அடைப்பதுடன், இனியும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories