அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இன்றும் நாளையும்… ஏகாதசி… எச்சரிக்கை!

athivarathar crowd - 2026

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கும் ஆவலில் ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். அருகில் உள்ள ஊர்களில் என்று மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆவலுடன் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர் பக்தர்கள்.

குறிப்பாக, வார நாட்களை விட, வார இறுதி நாட்களில் கூட்டம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் சராசரியாக இரண்டரை லட்சம் பேர் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலும், தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது

இந்நிலையில், உள்ளூர்வாசிகள் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஜூலை 27, 28- சனி, ஞாயிறு இன்று மாலை முதல் நாளை மாலை வரை ஏகாதசி திதி இருப்பதால் அன்றைய தினத்தில் ஸ்ரீ அத்திவரதர் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தயவுசெய்து கிளம்பி வராதீர்கள்.

அன்றைய தினங்களில் அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே கூட்டத்தை தவிர்க்க இன்று மாலை முதல் நாளை மாலை வரை கோவிலுக்கு வருகை தவிர்த்தல் நல்லது… என்று எச்சரிக்கின்றார்கள்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

#அத்திவரதர்வைபவம் 27/7/2019 – திருவாடிப்பூரம் உத்ஸ்வம் 2ம் நாள் மாலை

திருவாடிப்பூரம் உத்ஸவ புறப்பாட்டில், ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்குள்ளே எழுந்தருளும் பொழுது, மிகச் சரியாக “உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்…… அத்தியூரான் புள்ளை ஊர்வான்” பாசுர அனுஸந்தானமாயிற்று. இப்பாசுர அனுஸந்தானத்தை, அத்தி வரதனும் தன் வசந்த மண்டபத்திலிருந்து திருச்செவி சாற்றியருளியது ஓர் அற்புத தருணம், அனுபவம்.

– வி.என்.கேசவபாஷ்யம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories