2 நாளாக ஊர் ஊராக சென்று லாட்ஜில் 14 வயது சிறுமியுடன் கழித்த முகமது சபீன்!

Published:

muhamad sabir - 2026

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சிறுமி 14 வயது. சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார். அதனால், வீட்டில் பதறிய பெற்றோர் அவரை எங்கெங்கோ தேடி அலைந்தனர். கடைசியில் போலீசில் புகார் தந்தனர்.

போலீசாருக்கு சிறுமியின் செல்போன் சிக்னல் மட்டும் சிக்கியது. இது ஒன்றுதான் அவர்களுக்கு இருந்த ஒரே க்ளூ. இதை வைத்து கொண்டு மற்றதை எல்லாம் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் அந்த சிக்னலோ பொள்ளாச்சி, திண்டுக்கல், பழனி என்று ஒவ்வொரு ஊராக மாறி கொண்டே இருந்தது.

கடைசியில் செல்போன் ஆப் ஆகிவிட்டது, இதனால் இருந்த சிக்னலும் இல்லாமல் போய்விட்டது. பிறகு 2 நாள் கழித்து திரும்பவும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சிக்னல் காட்டப்பட்டது. இதையடுத்து விரைந்து சென்றனர் போலீசார். வலைவீசி தேடியதில், சிறுமியை கண்டுபிடித்துவிட்டனர். ஒரு இளைஞருடன் ஊரை விட்டு வந்துள்ளார். அந்த இளைஞர் பெயர் முகமது சபீன். 2 பேரும் ரூம் போட்டு தங்கியிருந்தபோது, கையும் களவுமாக சிக்கி கொண்டனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

2 பேரும் ஃபேஸ்புக் நண்பர்களாம். அப்படியே மெசேஜ்ஞ்சர் மூலம் பழகியிருக்கிறார்கள். அந்த மெசேஞ்சரில் சிறுமியை ஆஹா, ஓஹோவென்று முகமது வழிய, அதற்கு இந்த பெண்ணும் மயங்கியிருக்கிறார். கடைசியில் இந்த நட்பு காதலாகி, வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் ரூம் போடும் நிலைமைக்கு வந்துள்ளது.

இவருக்கு தொற்று பரவிடும் என்ற பயம் இல்லை. லாக்டவுன் கணக்கில்லை. இ-பாஸ் கணக்கில்லை. ஒரே குறிக்கோள் பெண்ணிடம் ஜாலியாக இருப்பதுதான். “எப்படியாவது உன் முகத்தை மட்டும் பார்த்துட்டு நைட்டுக்குள்ள வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன்” கட்டாயப்படுத்தி தான் சிறுமியை வெளியே வரவழைத்துள்ளார்.

அதனால் முகமது திண்டுக்கல்லில் இருந்து பைக்கில் மதுரைக்கு சென்றுள்ளார். இ-பாஸ் இல்லாமலேயே போயிருக்கிறார். அந்த பெண்ணை வைத்து கொண்டு, இத்தனை ஊர்களுக்கும் இ-பாஸ் இல்லாமலேயே சென்றுள்ளார். ஒவ்வொரு ஊரிலும் லாட்ஜில் ரூம் போட்டு அந்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்

2 நாட்கள் இவர்கள் ரூம் போட்டு சுற்றியுள்ளனர். இந்த 2 நாட்களில் பலமுறை முகமது தன்னுடன் உறவு கொண்டதாக சிறுமி போலீசாரிடம் சொல்லி இருக்கிறார். இப்போது அந்த முகமதுவை போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர். சிறுமிக்கு மெடிக்கல் செக்கப் செய்யப்பட்டு, ஒரு ஹோமில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img