
பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை மதுரை ரயில் உட்பட தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்:20691) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் திங்கள்கிழமை (அக்.17) திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும்.
செங்கோட்டை-மதுரை (06662) இடையே காலை 7 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை-செங்கோட்டை (06665) இடையே மாலை 5.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகரில் இருந்து மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும்.
நாகர்கோவில்-கோவை (16321) இடையே காலை 7.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
மறுமார்க்கமாக கோவை-நாகர்கோவில் இடையே காலை 8 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (அக்.18) திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.