சாதனை படைத்த விமானப்படை நிகழ்ச்சி சோகத்தில் முடிந்தமைக்கு திமுக அரசே காரணம்!

chennai air show - 2026
#image_title

உலகமே வியந்து பாராட்டிய சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு நெஞ்சம் பொறுக்கவில்லை. திறனற்ற திமுக அரசின் அலட்சியப் போக்கே இதற்கெல்லாம் காரணமாகும் என்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து வெளியான அறிக்கை:

சென்னை மெரினா கடற்கரை வான்பரப்பில் நம் நாட்டின் விமானப்படை அகிலமே வியக்கும் வகையிலான விமான சாகச நிகழ்ச்சியை கடந்த 06/10/2024 அன்று நடத்தியது.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு சண்டிகர் நகரிலும், 2023 ஆம் ஆண்டு பிரக்யராஜ் நகரிலும் இந்த போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை நம் விமானப்படை நடத்தியுள்ளது.

நம் மாநிலத்தில் தலைநகரில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதைய நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் ஆவலும் இருந்தது. அதுவும் நிகழ்ச்சி நடந்த நாள் ஞாயிற்றுகிழமை என்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை ஆவலுடன் விமான சாகச நிகழ்ச்சியை காண திரண்டனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து கடந்த 26/09/2024 அன்று ஊடகங்களை சந்தித்த விமானபடை துணைத் தளபதி பிரேம் குமார் அவர்கள் ஏறத்தாழ 15 லட்சம் மக்கள் விமானபடை சாகச நிகழ்ச்சியை காண வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஏற்கனவே 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண திரண்ட மக்களின் எண்ணிக்கையை வைத்து 15 லட்சம் பேர் கூடுவார்கள் என்று கணித்தது போலவே மக்கள் திரண்டு வந்தனர். லிம்கா சாதனைப் புத்தகத்தில் கூட இந்நிகழ்ச்சி இடம்பெற்று விட்டது.
ஆனால் திமுக தலைமையிலான மாநில அரசு மக்களுக்கு விளம்பரப் படுத்தியதே தவிர மக்களுக்கான போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிடம், குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் என எந்தவொரு ஏற்பாடும் செய்யவில்லை.

வாகன நிறுத்துமிடத்தில் இடமில்லை. வாகனத்தை நிறுத்திவிட்டு நெடுந்தூரம் மக்கள் நடக்க வேண்டியிருந்தது‌.

அதனால் முதியவர்கள் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
15 லட்சம் மக்கள் வந்து செல்லும் வகையில் மாநகர போக்குவரத்து திட்டமிடப்படவில்லை.

நிகழ்ச்சி முடிந்தும் மக்கள் கலைந்து செல்ல பலமணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் வந்து செல்ல மாநகர போக்குவரத்து துறை பேருந்து வசதி செய்யவில்லை, மெட்ரோ ரயில் மற்றும் மாநகர ரயில்வே துறைக்கு உரிய தகவலை மாநில அரசு அளிக்கவில்லை.

அந்த நேரத்தில் மாநில அரசின் மாநகர போக்குவரத்து துறையும் தயார் நிலையில் இல்லை. இப்படியாக ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் திமுக அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

மக்கள் கூட்டத்தை பார்த்த பின்னரே அதிகாரிகள் அவசர ஏற்பாடுகள் செய்து ஓரளவு சமாளித்திருக்கிறார்கள். சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்ற வாகனங்களால், மக்கள் அனைவருக்கும் எங்கு செல்வது என்றே தெரியாமல் தண்டவாளத்தின் வழியாக நடந்து சென்ற அவலம் எல்லாம் நடந்தேறியுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் இதுவரையில் 5 பேர் மரணித்துள்ளனர், பலர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ எந்தவொரு ஏற்பாடுகளும் செய்யப்படாத காரணத்தினால்தான் ஐந்து நபர்களின் உயிர் அநியாயமாக பறி போயுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் எந்தவொரு முன்னேற்பாடும் செய்யாமல், மக்களால் தூக்கி எறியப்பட்ட மேற்கத்திய நாடுகளின் மன்னராட்சியைப்போல் தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது குடும்பத்தோடு நிகழ்ச்சியை கண்டு களிக்க வந்தாரே தவிர, பொதுமக்கள் பற்றி துளியும் சிந்திக்கவில்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

காவல்துறையும், மாநகராட்சி அதிகாரிகளும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு சேவை செய்வது தங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்பது போல அவர்களுக்கு மட்டும் தேவையானதை செய்து விட்டு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் நெறிப்படுத்துவதிலும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதிலும் தவற விட்டுள்ளனர்

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

இப்போதும் கூட தமிழக அரசு தனது தவறை உணர்ந்து கொள்ளாமல் தனக்கு விசுவாசமான ஊடகங்களை வைத்து நீர்ச்சத்து குறைபாட்டால் இறந்தனர், வெயில் தாக்கத்தால் இறந்தனர். கூட்ட நெரிசல் இல்லை என்று சப்பைக்கட்டு கட்ட வைக்கின்றனர்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் 15 லட்சம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 15 லட்சம் பேருக்கும் காவல்துறை அதிகாரிகளா போட முடியும் என்று கூறுவதெல்லாம் ஆணவத்தின் உச்சம்.

இச்சம்பவத்தின் மூலம் திறனற்ற திமுக அரசு திருந்த போவதுமில்லை தன்னை தவறிலிருந்து திருத்திக் கொள்ள போவதும் இல்லை.
மக்களாகிய நாம் தான் விழிப்போடு செயல்பட வேண்டும். திமுகவின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள வேண்டும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories