திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி

Published:

சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கொள்ளை முயற்சி நடந்தபோது, திடீரென அலாரம் அடித்ததால், சத்தம் கேட்டு பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டனர். இதனால் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதை அடுத்து, கோவில் உண்டியலில் இருந்த பணம், ஸ்வாமி கழுத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், கவசங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையரிடம் இருந்து தப்பின. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img