பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஆகும் தமிழகம்: பாஜக., எச்சரிக்கை!

narayanan-thirupathi
narayanan-thirupathi

கேரளத்தில் பிஎஃப்ஐ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், தமிழகத்தின் ஆனைமலை பகுதிக்கு தப்பி வந்து பதுங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக பாஜக., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக, புகலிடமாக தமிழகம் மாறி விடக்கூடாது என்ற அக்கறையோடு காவல்துறையும், தமிழக அரசும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்ட போது, கடந்த வாரம், கேரளாவில் மனைவியின் முன்னே 30 முறை வெட்டி படுகொலை செய்யப்பட்ட 27 வயது இளைஞர் சஞ்ஜித்தை கொன்ற கும்பல் தமிழகத்தின் கோவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாத எஸ் டி பி ஐ இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளார்கள் என்றும் கேரள காவல் துறை கூறியுள்ளது.

தமிழகத்தில் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகத்தில் கோவையில் விசாரணை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் நடைபெற்ற ராமலிங்கம், சசிகுமார், எஸ்.ஐ. வில்சன் படு கொலைகளில் தொடர்பிருப்பதாக எஸ் டி பி ஐ இயக்கத்தை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள/ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் படுகொலை செய்து விட்டு தமிழகத்திற்கு தப்பி ஓடி உள்ளதாக சொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக, புகலிடமாக தமிழகம் மாறி விடக்கூடாது என்ற அக்கறையோடு காவல்துறையும், தமிழக அரசும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் அமைப்புகளை தடை செய்ய வேண்டிய நேரம் இது என்பதை உணர வேண்டும்… என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories