குப்பைத் தொட்டியில் உணவு தேடியவருக்கு தெருவில் பாடி வந்த பணத்தைக் கொடுத்த மனம்!

sing
sing

சமூக ஊடகங்களில் சில முக்கிய வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். இங்கு ஒருவர் செய்த மனித நேயமிக்க செயல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

லிவ் ஹார்லேண்ட் என்கிற பெண்மணி தெருக்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். அவர் பாடும் பல பாடல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவார்.

இப்படி தான் சில நாட்களுக்கு முன்பு எப்போதும் போல தனது இசை நிகழ்வை தெருக்களில் தொடங்கி உள்ளார்.

அப்போது இசை கலைஞர் அரோரா பாடிய ‘ரன் அவே’ என்கிற மிக பிரபலமான பாடலை ஹார்லேண்ட் பாடி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அருகில் இருந்த குப்பை தொட்டியில் ஒருவர் எதையோ தேடி கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார்.

அங்கு எதாவது சாப்பிட கிடைக்குமா என்று அவர் தேடி கொண்டிருப்பதை ஹார்லேண்ட் உணர்ந்தார்.

உடனே தான் பாடி கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு அவர் அருகில் சென்று “நீங்கள் உங்களுக்கான உணவை வாங்கி கொள்ள நான் பணம் தருகிறேன். அதை விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

பிறகு, தான் பாடியதற்காக பிறர் செலுத்திய பணத்தில் இருந்து ஒரு பங்கை எடுத்து சென்று அவரிடம் கொடுத்து “உங்களுக்கு தேவையான புதிய உணவை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள்” என்று ஹார்லேண்ட் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் பாடத் தொடங்கினார்.

இதை பெற்ற அந்த ஏழை மனிதர் தனது நன்றியை ஹார்லேண்ட்க்கு தெரிவிக்கும் வகையில், “மிக்க நன்றி அன்பே” என்று மகிழ்வுடன் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இவை அனைத்தையும் அங்கிருந்த பலர் நேரடியாக பார்த்து கொண்டிருந்தனர். தீடிரென்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் இவர் அந்த ஏழை மனிதருக்கு சாப்பிட தந்த பணத்தை விட இரு மடங்கு பணத்தை அவரின் பெட்டியில் வைத்து விட்டு சென்றார்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்லேண்ட் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த இரக்க குணத்தை பார்த்து பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை இதுவரை 1.8 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு சிலர் சிறப்பான கமெண்ட்களை தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அதில் ஒருவர் “நீங்கள் செய்ததை நம்ப முடியவில்லை!! நீங்கள் உண்மையிலேயே ரொம்ப நல்லவர்” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “நீங்கள் செய்த செயல் மிக அழகானது, ஐ லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பலர் ஹார்லேண்ட்டை மனதார பாராட்டி வருகின்றனர். நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோ மூலம் நாம் எல்லோரும் நினைவுக்கூற வேண்டும்.

https://www.instagram.com/reel/CV0xeo8oAbn/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories