December 6, 2025, 9:10 AM
26.8 C
Chennai

2 கோடி ரூபாய் கொடுத்த நண்பனை ஏமாற்ற கொள்ளை நாடகம் நடத்திய விவசாயி ..

66a153583a386eccfb3d987884192a0d - 2025
கைதான லோகநாதன்
images 100 - 2025

ஆத்தூர் அருகே நண்பனை ஏமாற்ற கொள்ளை நாடகம் நடத்திய விவசாயி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சார்வாய் புதூர் கிராமத்தில் சாமியார் கிணறு என்ற பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன்(45). இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் மணி விழுந்தான் பகுதியைச் சேர்ந்த நண்பர் கணேசன் என்பவர் 2 கோடி ரூபாயை தனித்தனியே ஒரு கோடி ரூபாய் வீதம் இரண்டு பைகளில் கட்டி எடுத்து வந்து வந்து கொடுத்துள்ளார். இதனை நெல் மூட்டைகளுக்கு இடையே ஒரு கோடியும் பீரோவில் ஒரு மூட்டையும் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7 தேதி இரவு அப்பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த இரண்டு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொள்ளைபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது தனது வீட்டில் இருந்த 48,000 மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக முதலில் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தனது நண்பர் மணிவிழந்தான் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன் மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கோடி ரூபாயை எடுத்துவந்து அதை பாதுகாப்பாக வைக்கும் படி கூறியதாகவும் அதன் படி வீட்டில் வைத்திருந்த ஒரு கோடி பணப் பையை முகமூடி கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் தடையறிவில் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தடயங்களை சேகரித்து தொடர்ந்து அவரது நண்பர் கணேசன் மற்றும் அவரது மகன் கோபாலகிருஷ்ணனை வரவழைத்து விசாரணை செய்து இரண்டு கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்றும் விசாரித்தனர். அப்போது இரண்டு பேரும் முறையாக பதில் அளிக்காமல் மாறி மாறி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது. இதனையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர கிடுக்குப் பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று தனது கரும்பு தோட்டத்தில் ஒரு கோடி ரூபாய் பணப் பையை முகமூடி கொள்ளையர்கள் வீசிச் சென்றதாக போலீசாரிடம் லோகநாதன் தெரிவித்துள்ளார். 

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இது குறித்து இருவரிடம் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். நண்பனை ஏமாற்ற லோகநாதன் இது போன்ற கொள்ளை நாடக சம்பவங்களில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் கரும்பு காட்டில் இருந்த ஒரு கோடி ரூபாயையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வருமானத்துறை விசாரணைகளும் இருவரும் சிக்கி உள்ளதால் பணத்தை கொடுத்தவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை அடிப்படையில் நண்பர்களிடம் பணத்தை கொடுத்த கோபாலகிருஷ்ணன் தற்போது பணத்தையும் இழந்து வருமான வரித் துறையின் விசாரணைக்கும் உட்படுத்தப்படுவதோடு நண்பனை ஏமாற்ற கொள்ளை திட்டம் தீட்டிய விவசாயி தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories