2 கோடி ரூபாய் கொடுத்த நண்பனை ஏமாற்ற கொள்ளை நாடகம் நடத்திய விவசாயி ..

66a153583a386eccfb3d987884192a0d - 2026
கைதான லோகநாதன்
images 100 - 2026

ஆத்தூர் அருகே நண்பனை ஏமாற்ற கொள்ளை நாடகம் நடத்திய விவசாயி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சார்வாய் புதூர் கிராமத்தில் சாமியார் கிணறு என்ற பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன்(45). இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் மணி விழுந்தான் பகுதியைச் சேர்ந்த நண்பர் கணேசன் என்பவர் 2 கோடி ரூபாயை தனித்தனியே ஒரு கோடி ரூபாய் வீதம் இரண்டு பைகளில் கட்டி எடுத்து வந்து வந்து கொடுத்துள்ளார். இதனை நெல் மூட்டைகளுக்கு இடையே ஒரு கோடியும் பீரோவில் ஒரு மூட்டையும் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7 தேதி இரவு அப்பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த இரண்டு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொள்ளைபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது தனது வீட்டில் இருந்த 48,000 மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக முதலில் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தனது நண்பர் மணிவிழந்தான் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன் மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கோடி ரூபாயை எடுத்துவந்து அதை பாதுகாப்பாக வைக்கும் படி கூறியதாகவும் அதன் படி வீட்டில் வைத்திருந்த ஒரு கோடி பணப் பையை முகமூடி கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் தடையறிவில் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தடயங்களை சேகரித்து தொடர்ந்து அவரது நண்பர் கணேசன் மற்றும் அவரது மகன் கோபாலகிருஷ்ணனை வரவழைத்து விசாரணை செய்து இரண்டு கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்றும் விசாரித்தனர். அப்போது இரண்டு பேரும் முறையாக பதில் அளிக்காமல் மாறி மாறி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது. இதனையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர கிடுக்குப் பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று தனது கரும்பு தோட்டத்தில் ஒரு கோடி ரூபாய் பணப் பையை முகமூடி கொள்ளையர்கள் வீசிச் சென்றதாக போலீசாரிடம் லோகநாதன் தெரிவித்துள்ளார். 

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இது குறித்து இருவரிடம் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். நண்பனை ஏமாற்ற லோகநாதன் இது போன்ற கொள்ளை நாடக சம்பவங்களில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் கரும்பு காட்டில் இருந்த ஒரு கோடி ரூபாயையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வருமானத்துறை விசாரணைகளும் இருவரும் சிக்கி உள்ளதால் பணத்தை கொடுத்தவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை அடிப்படையில் நண்பர்களிடம் பணத்தை கொடுத்த கோபாலகிருஷ்ணன் தற்போது பணத்தையும் இழந்து வருமான வரித் துறையின் விசாரணைக்கும் உட்படுத்தப்படுவதோடு நண்பனை ஏமாற்ற கொள்ளை திட்டம் தீட்டிய விவசாயி தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories