நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு!

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

railway news - 2026
#image_title

தென்காசி, ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழி திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு வண்டி ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களாக நிறுத்தப்பட்ட பலரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் கோடைக்கால வாராந்திர சிறப்பு இரயிலாக சேவை(06029/06030) வழி தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை களில் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடம் எண் 06030 திருநெல்வேலி மேட்டுப்பாளையம்
13.04.25 முதல் 04.05.25 வரையும்
தடம் எண் 06029 மேட்டுப்பாளையம் திருநெல்வேலி
14.04.25 முதல் 05.05.25 வரையும் இயங்கும்.என அறிவிக்கப்பட்டு
முன்பதிவு (10.04.25) காலை 08.00 மணிக்குத் துவங்கியுள்ளது.

இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகள் வர்த்தகர்கள் மாணவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வண்டி ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img