December 5, 2025, 8:43 PM
26.7 C
Chennai

வெற்றி விநாயகரை கும்பிட்டு… வெற்றி நாயகர் மோடிக்காக… முதல்வர் மேற்கொண்ட பிரசாரம்!

salem karumandurai - 2025வரும் ஏப்.18ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வேட்பு மனு தாக்கலை அதிமுக.,வினர் இன்று துவக்கியுள்ளனர்.

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் நிறைந்த பௌர்ணமி நாளில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். அதே நேரம், இன்று தனது ராசியான வெற்றி விநாயகரைக் கும்பிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

கருமந்துறை: மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்திலிருந்து தொடங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !

பிரசாரத்தின் போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்வதால்தான் அதிமுக ஆதரிக்கிறது! நாட்டை பாதுகாக்க பிரதமர் மோடியால் தான் முடியும்! நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்!

பாகிஸ்தானில் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தனை மீட்ட பெருமை பிரதமர் மோடியையே சேரும்!

salem karumandurai3 edappadi - 2025
சேலத்தில் கருமந்துரை, புத்திரகவுண்டம்பாளையம் மற்றும் வழி நெடுகிலும் உள்ள பொதுமக்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மற்றும் சேலம் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

எதிரிகளை தூள் தூளாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடம் தான் உள்ளது. எனவே நாடு பாதுகாப்பாக இருக்க மீண்டும் பிரதமராக மோடியே வர வேண்டும். ஆகவே பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து அதிமுக அமைத்துள்ள கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

பாரதிய ஜனதா – அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதி எளிதாக கிடைக்கும் என்று பேசினார்.

தொடர்ந்து எல்.கே.சுதீஷிற்கும், சேலம் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கும் வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி, தனது பிரசாரத்தை தொடங்கும் முன் தனக்கு ராசியான வெற்றி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

salem karumandurai3 edappadi3 - 2025
சேலத்தில் கருமந்துரை, புத்திரகவுண்டம்பாளையம் மற்றும் வழி நெடுகிலும் உள்ள பொதுமக்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மற்றும் சேலம் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

முதல்வருடன் அமைச்சர் சி.வி.சண்முகம், வேட்பாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் வெற்றி விநாயகரை தரிசித்தனர். பின்னர் கருமந்துறை கீழ்வீதியில் துண்டு பிரசுரங்களை வழங்கினார் முதல்வர்!

கருமந்துறை, புத்தரக் கவுண்டபாளையம், வாழப்பாடி, , அயோத்தியாபட்டணம் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தும், வேட்பாளரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories