அண்டா குண்டா சட்டிக்கெல்லாம் இனி வேலையில்லை: செல்லூர் ராஜூ!

sellur-k-raju
sellur-k-raju

மதுரை : நல்லவர் ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழியும் என்று கூறுவார்கள். திருவள்ளுவரின் திருக்குறளும் அவ்வாறு கூறுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஆட்சி நடைபெறுகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கொட்டும் மழையில் குடை பிடித்த படி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

நாளை மதுரையில் 1,295 கோடி ரூபாய் மதிப்பில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானம் நுழைவுவாயில் பகுதியில் பிரம்மாண்ட முல்லைப் பெரியாறு அணை குடிநீர்த் திட்டம் குறித்த மாதிரி வடிவத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசிய போது…

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ரூ.1,295 கோடி மதிப்பில் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இது வரலாற்றில் மிக முக்கிய ஒன்று. மதுரை மக்கள் மிகவும் நன்றியுடையவர்கள்.

நம் மக்கள் குடிக்க தண்ணீர் கொடுத்தாலே அவர்களுக்காக எதையும் செய்வார்கள். அதுவே இந்த மண்ணின் குணம். இந்த தலைமுறைக்கும் மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அதிமுக சார்பில் 20 இடங்களில் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

அண்டா குண்டா சட்டி உள்ளிட்ட எதுக்கும் இனிமேல் வேலை இல்லை. மதுரை மக்கள் வீடுகளில் இருந்தபடியே மக்கள் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். நல்லவர் ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழியும் எனக் கூறுவார்கள். திருவள்ளுவர் திருக்குறளும் அவ்வாறு கூறுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஆட்சி நடைபெறுகிறது.

மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுள்ளனர். எங்களுடைய திட்டங்களை செயல்பாடுகளை கண்டு எங்களுக்கு ஆதரவளிப்பார்கள். எங்கள் செயல்பாடுகளைக் கண்டு எதிர்க் கட்சித்தலைவர் கூட குற்றம் குறை சொல்ல முடியவில்லை.

புயல் மழை காலங்களில் பொதுமக்களுக்கு தாமதமின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளை மேடான பகுதிக்கு மாற்றி பொருட்களை பாதுகாக்கவும் கூறியுள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories