மதுரை; விதிமீறி வாரச்சந்தை! காய்கறி வியாபாரிகளை விரட்டிய காவல்துறை!

villapuram market
villapuram market

வில்லாபுரம் பகுதியில் கொரானா விதிமுறைகளை மீறி வாரச்சந்தையில் அமைக்கப்பட்டதால் காய்கறி வியாபாரிகளை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் விரட்டியடிப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு  பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரசந்தை நடைபெறுவது வழக்கம், இந்த நிலையில் இங்கே விற்பனைக்கு வந்த காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் இன்று தங்களது பொருட்களை சந்தைப் படுத்தியுள்ளனர்.

கொரானா தொற்று அதிதீவீரமாக பரவி வரும் நிலையில் மதுரையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாள் ஒன்று 1000க் கடக்கிறது. இந்த நிலையில் தற்போது வில்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாரந்தோறும் அமைக்கப்படும் வியாழக்கிழமை  அமைக்கப்படுவது வழக்கம் இந்த வாரச் சந்தை நம்பி 500-க்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் இங்கு கடை போடுவது வழக்கம். 

இந்த நிலையில்,  வில்லாபுரம் பகுதியை சுற்றியுள்ள மீனாட்சி நகர், அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜெயவிலாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசிக்கக்கூடிய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து பொருட்களை மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

villapuram market2
villapuram market2

தற்போது மாநகராட்சி உத்தரவின் பேரில் மறு அறிவிப்பு வரும் வரை இங்கு நடைபெறும் வாரச்சந்தை செயல்பட அனுமதி இல்லை எனவும் மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இங்குள்ள வியாபாரிகள் தங்களுக்கு கொரானா கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள மதியம் 12 மணி வரை அரசு உத்தரவின் பேரில் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் எனவும், இதை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நீட்டிக்க முடியும் என்றும் இங்குள்ள காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஒரு தரப்பினர் கடை போடுவதற்கு அனுமதி அளித்ததால் மற்றொரு தரப்பு காய்கறி விற்பனையாளர்கள் மாநகராட்சி உதவி பொறியாளர் கருப்பையா, ஊழியர்கள் மற்றும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று ஒரு நாள் மட்டும் வார சந்தை நடத்த அனுமதியளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories