மதுரை: 3 டன் போலி சிகரெட் பறிமுதல்; போலீசார் விசாரணை!

madurai cigerette - 2026

மதுரை: தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவரது உத்தரவின் பேரில் ஐந்திற்க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு  மதுரை மாநகர் பகுதிகளில் முழுவதும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் ஆறாவது தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு கிடைத்த ரகசியத்தகவலை தொடர்ந்து குடோனுக்கு சென்ற காவல்துறையினர் பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது சுமார் 1200க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் சுமார் 3 டன் அளவு மதிப்புள்ள இந்திய புகையிலை நிறுவனத்தால் அங்கீகரிக்கப் படாத போலியான சிகரெட் பெட்டிகள் இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து போலி சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் குடோன் கண்காணிப்பாளர் பிரபுவை கைது செய்து விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடோனின் உரிமையாளர் பன்னீர் செல்வம் சட்டவிரோதமாக தென் மாவட்டங்களுக்கு சாக்லேட் பாக்ட்டுகள் விற்பனை செய்வது போன்று புகையிலை மற்றும் போலி சிகரெட்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் பன்னீர்செல்வத்தை தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள். மேலும் குடோனை கண்டுபிடித்து சிறப்பாக பணியாற்றிய விளக்குத்தூண் உதவி ஆணையர் சூரக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டி, மற்றும் தனிப்படை காவல்துறையினர் மணிமாறன், சரவணன், பிரபு ஆகியோரை மாநகர காவல்துறை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories