மதுரை அருகே நடை சாத்தப்பட்டிருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம்!
மதுரை அருகே திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடிப்பெருக்கு மற்றும் 18 முன்னிட்டு தமிழக அரசு விதித்துள்ள தடையால் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.
இதனால் ,பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான தமிழ் கடவுள் முருகனின் திருப்பரங்குன்றத்தில் ஆடி18 முன்னிட்டு வழக்கமாக கிராம பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
ஆனால், தற்பொழுது தமிழக அரசு நடைமுறை விதியை முன்னிட்டு, ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை, ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.