விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி மையங்கள் ..



விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 296 மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் தெரிவித்தார்.
ராஜபாளையம், 3 வது வார்டு நகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை இல்லம் தேடி கல்வி மையங்களில் தன்னார்வலர்களாக பணிபுரிபவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் ரீடிங் மாரத்தானில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் வேணி தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரவி வரவேற்றார்.
தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரீடிங் மாரத்தான் கற்றல் உபகரணங்களை வழங்கி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசுகையில் கூறியதாவது
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் இடைவெளியை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து முதல் ஆறு மாத காலமாக செயல்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 3695 மையங்கள் செயல்பட்டு வருகின்றது. தற்போது மாணவர்களின் நலன் கருதி தேவையின் அடிப்படையில் கூடுதல் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளர் முருகு திருநாவுக்கரசு தன்னார்வலர்கள், தலைமை ஆசிரியை அன்னம்மாள்,மாணவர்கள், ஆசிரியப் பயிற்றுநர் ரத்தின செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

IMG 20220602 WA0070 - 2026
IMG 20220602 WA0069 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories