December 5, 2025, 6:17 PM
26.7 C
Chennai

மதுரை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் தம்பி கைது..

madurai1 - 2025

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொத்து பிரச்னை காரணமாக தம்பியை கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கொலைக்கு காரணமான அண்ணன் மற்றும் தம்பியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

திருமங்கலம் அருகே செக்காணுரணி பாண்டியன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் விருமாண்டி(30). இவருடைய மனைவி விஜயா. விருமாண்டி திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். இவருடைய அண்ணன் கார்த்திக் ராஜா தம்பிகள்,  ஐகோர்ட் ராஜா மற்றும் காசி ராஜா ஆகியோர் உள்ளனர். 

இந்நிலையில் விருமாண்டிக்கும் கார்த்திக் ராஜா, ஐகோர்ட்ராஜா சொத்து பிரச்னை  சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணியளவில் குடும்பப் பிரச்னை பற்றி பேசுவதற்காக விருமாண்டி மற்றும் விஜயாவை கார்த்திக் ராஜா ஐகோர்ட்ராஜா அழைத்துள்ளனர்.

இதனால் அவர்களது சொந்த ஊரான கரிசல்பட்டியில் உள்ள வீட்டு முன்பு சென்ற போது அங்கிருந்த விருமாண்டி அம்மா தங்கமாளை பார்த்து எல்லாத்திற்கும் காரணம் நீதானே என விருமாண்டி திட்டி உள்ளார். இதனால் கார்த்திக் ராஜா மற்றும் ஐகோர்ட் ராஜா நண்பர் காளப்பன்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக விருமாண்டியை கத்தியால் வெட்டி உள்ளனர். மேலும் அம்மா தங்கம்மாள் தடுத்துள்ளார். 

இந்நிலையில் கடைசி தம்பி காசிராஜா அருகில் இருப்பவர்கள் அங்கு வரவே மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக செக்காணுரணி காவல் துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் செக்காணுரணி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விருமாண்டி மனைவி விஜயா செக்காணுரணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜா, ஐகோர்ட்ராஜா, சரத்குமார் மூன்று பேரையும் காவல் துறையினர்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories