December 6, 2025, 4:53 AM
24.9 C
Chennai

சிவகாசியில் இரவில் கொட்டிய கனமழை! சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

sivakasi rain - 2025

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று இரவு கனமழை பெய்தது. காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்த நிலையில் கடுமையான வெட்கை இருந்தது. இந்த நிலையில் இரவு 9 மணியளவில் சாரலாக துவங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த மழையாக பெய்யத்துவங்கியது. பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால், சிவகாசி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல இடங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மழைநீரில் சாய்ந்து விழுந்து இழுத்துச் செல்லப்பட்டது. மாரியம்மன் கோவில் பகுதி, புதுரோட்டு தெரு, ஜவுளிக்கடை வீதி, மணி நகர், பழைய நீதிமன்ற சாலை, தெற்கு தெரு, காளியம்மன் கோவில் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இரவு நீண்ட நேரம் சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளான சித்துராஜபுரம், சசிநகர், பேர்நாயக்கன்பட்டி, மாரனேரி, விளாம்பட்டி, மாதாங்கோவில்பட்டி, பாறைப்பட்டி, மீனம்பட்டி, சுந்தர்ராஜபுரம், அனுப்பங்குளம், பேராபட்டி, அம்மன் நகர், திருத்தங்கல், செங்கமலப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்றிரவு கனமழை பெய்தது.

இதனால் இந்தப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. சிவகாசி பகுதியில் பெய்த கனமழை பொதுமக்களுக்கு சற்று சிரமத்தை தந்தாலும், குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மதுரை மாவட்டத்தில், வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories