மக்களே கவனம்! விருதுநகர் – பகவதிபுரம் & இடமன் – புனலூர் ரயில் பாதையில் இன்று மின்சார ரயில் சோதனை!

IMG 20230329 WA0003 - 2026

விருதுநகர்-தென்காசி,தென்காசி-செங்கோட்டை -பகவதிபுரம், இடையேயும் இடமண்-புனலூர் தடத்திலும் மின்மயமாக்கப்பட்ட இந்த அகல ரயில் பாதைகளில் தென்னக ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் ஏ கே சித்தார்த் தலைமையில் மதுரை கோட்ட மேலாளர் பி ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று எலக்ட்ரிக் எஞ்சின் பொருத்தப்பட்ட சிறப்பு ரயிலில் அதிவேக சோதனை ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, புதிதாக மின்மயமாக்கப்பட்ட விருதுநகர் – தென்காசி – செங்கோட்டை – பகவதிபுரம் & இடமன் – புனலூர்ரயில் பாதையில் இன்று எலெக்ட்ரிக் லோகோவைப் பயன்படுத்தி சட்டப்பூர்வ ஆய்வு மற்றும் வேக சோதனை நடத்துவார்.

திரு பி.ஆனந்த், கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் தெற்கு ரயில்வே தலைமையகம், ரயில்வே மின்மயமாக்கல் மற்றும் மதுரை கோட்டத்தின் உயர் அதிகாரிகள் ஆய்வின் போது உடன் வருவார்கள். விருதுநகரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் ஆய்வு ரயில் மதியம் புனலூருக்கு வந்து சேரும். எலெக்ட்ரிக் லோகோவைப் பயன்படுத்தி வேக சோதனை நடைபெறும்.

எலெக்ட்ரிக் லோகோவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு ரயில் புனலூரில் இருந்து 16.15 மணிக்கு புறப்பட்டு 16.35 மணிக்கு எடமண் வந்தடையும் . பகவதிபுரத்தில் இருந்து 16.55 மணிக்கு வேக சோதனை தொடங்கி 20.30 மணிக்கு விருதுநகரில் நிறைவடைகிறது.

விருதுநகர்- தென்காசி – செங்கோட்டை பிரிவுபிரிவின் மொத்த ரயில் பாதை கிலோமீட்டர் (Rkm) 129.99 ஆகும். பிரிவில் உள்ள மொத்த பாதை கிமீ 140.89. பிரிவில் எட்டு ரயில் நிலையங்கள் உள்ளன. துணை மின் நிலையங்கள்: விருதுநகர் மற்றும் வஞ்சிமணியாச்சி துணை மின் நிலையங்கள் இப்பிரிவுக்கு மின்சாரம் அளிக்கும். கூடுதலாக,சோழபுரம் மற்றும் செங்கோட்டையில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

திருத்தங்கல் மற்றும் பாம்பகோவில்சண்டியில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் துணைப் செக்ஷனிங் போஸ்டர்கள் நிறுவப்பட்டுள்ளதுவிருதுநகரில் உள்ள ஓவர் ஹெட் எலக்ட்ரிக் (OHE) டிராக்ஷன் டிப்போ மற்றும் ராஜபாளையத்தில் புதிதாக அமைய உள்ள OHE டிப்போ ஆகியவை இப்பிரிவின் பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும்.

விருதுநகரில் உள்ள டவர் வேகன் சைடிங்குடன், ராஜபாளையத்தில் புதிய டவர் வேகன் சைடிங் வர உள்ளது.செங்கோட்டை – பகவதிபுரம் மற்றும் எடமன் – புனலூர் பிரிவுபிரிவின் மொத்த பாதை கிலோமீட்டர் (Rkm) 14.70 ஆகும்.பிரிவில் உள்ள மொத்த பாதை கிமீ 16.71 ஆகும் பாதையில் இரண்டு பிளாக் ஸ்டேஷன்கள் உள்ளன . துணை மின் நிலையங்கள்:ஸ்விட்சிங் நிலையங்கள்- தென்மலையில் செக்ஷனிங் போஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது .

புதிய ஆரியங்காவு, எடமன் மற்றும் பகவதிபுரம் ஆகிய இடங்களில் துணைப் செக்ஷனிங் போஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் உள்ள ஓவர் ஹெட் எலக்ட்ரிக் (OHE) டிராக்ஷன் டிப்போ மற்றும் ராஜபாளையத்தில் புதிதாக அமைய இருக்கும் OHE டிப்போ ஆகியவை இப்பிரிவின் பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும்.

விருதுநகரில் உள்ள டவர் வேகன் சைடிங்குடன், ராஜபாளையத்தில் புதிய டவர் வேகன் சைடிங்கும் அமைய உள்ளதுஎடமன்-பகவதிபுரம் 34.677(கி மீ ) மின்மயமாக்கல் டிசம்பர் 2023க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனலூர் – கொல்லம் இடையேயான மின்மயமாக்கல் ஏற்கனவே முடிக்கப்பட்டு, மார்ச் 2022 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories