அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட கூட்டம்!

Published:

nellai-anthanar-munnetra-kazhagam1
nellai-anthanar-munnetra-kazhagam1

திருநெல்வேலி மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதி அந்தணர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது!

அந்தணர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜாளி சீ .ஜெயபிரகாஷ்ராவ்
ஆணைப்படி பொதுச் செயலாளர் மாங்காடு ஸ்ரீ G.பாலாஜி ஆத்ரேயா ஆலோசனைப்படி… ஞாயிறு இன்று காலை 11.00 மணி முதல் 1.30 மணி வரை முதல் கட்டமாக அந்தணர் முன்னேற்ற கழகம் திருநெல்வேலி மாவட்டம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை எவ்வாறு கொண்டு செல்வது மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகத்தில் அடுத்த கட்டமாக உறுப்பினர்கள் சேர்ப்பது போன்ற
முக்கிய செயல்பாடுகளை எவ்வாறு செயல்படுத்துவது என விவாதிக்கப் பட்டது ..

இதில், அந்தணர் முன்னேற்ற கழக திருநெல்வேலி மாவட்ட த்தலைவர் முத்துராமன், மாவட்டச்செயலாளர் சங்கர்ராமன்,
மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், மாவட்டப் பொருளாளர் வரதராஜன் மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளர் சுரேஷ் சிவம், மாவட்ட ஆன்மீக அணிச் செயலாளர் ராஜு மாவட்ட அமைப்பாளர் குருசங்கர்
நான்குநேரி சட்டமன்றத் தொகுதி செயலாளர் சுந்தர்,
நான்குநேரி சட்டமன்றத் தொகுதி மாணவர் அணிச் செயலாளர் வெங்கட்ராமன், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தலைவர் உமாபதி சிவம், சுதர்ஸன், சங்கரநாராயணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!
nellai-anthanar-munnetra-kazhagam
nellai-anthanar-munnetra-kazhagam

கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன..

இடபிள்யூ சான்றிதழ் மீண்டும் வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றிதெரிவித்தும்.

இடபிள்யூ எஸ், சான்றிதழ் மீண்டும் வழங்ககோரி உரிமை கேட்டு தமிழகம் முழுவதும் எழுச்சியோடு அனைத்து மாவட்டங்களிலும் தாலுக்காவிலும் ஆட்சியர் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கைவைத்தும் தமிழக முதல்வர் கவர்னருக்கு மனுஅளித்து தலைமையின் கட்டளைபடி சிறப்பாக செயல்பட்ட அந்தணர் முன்னேற்ற க்கழக அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கபட்டது.

தமிழகஅரசின் கல்வி வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும் ..

தொடர்ந்து ஹிந்துக்களை இந்து கடவுள்களை பிராமணர்களை இழிவுபடுத்திவரும் யூ டியூப்
சேனல்களை தடை செய்யக் கோரியும் இதனை பின்னால் இருந்து இயக்குபவர்கள் மீது நடவடிக்கை கோரியும்

அமைதியாக வாழ்ந்துவரும் பிராமண சமுதாயத்தை ஜாதியை கூறிக் கேலி கிண்டல் செய்தும் பிராமணர்களுக்கு எதிராக ஜாதி மத மோதலைதூண்டி பிராமண சமுதாயத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்து விட திட்டமிட்டு செயல்பட்டு வரும் சுப வீரபாண்டியன் சுந்தரவள்ளி அருணன் வீரமணி மீது தமிழஅரசு நடவடிக்கை எடுக்க கோரியும்…

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

பிராமணர்களை ஜாதியைக் கூறி இகல்வோர் மீது வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் ..

பிராமண சமுதாயத்தின் நலன் காக்க அந்தணர் நலவாரியம் அமைக்கக் கோரியும்

தமிழக அரசு திருக்கோவில்களை திறக்கக்கோரியும்,
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த அர்ச்சகர்களுக்கு நிவாரணத் தொகையாக 15,000 ரூபாய் உடனடியாக வழங்க கோரியும் ..

கட்சி வளர்ச்சிக்காக நிதி திரட்டுதல் பற்றியும்

அந்தணர் முன்னேற்ற கழகத்திற்கு அதிக உறுப்பினர்களை சேர்ப்பது.. உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன்

Related articles

Recent articles

spot_img