நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர், மாடசாமி (வயது 32). மெக்கானிக். அவருடைய மகள் மாலினி (3). நேற்று சனிக் கிழமை பகல் 11 மணி அளவில் மாலினி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். பின்னர் அவளை காணவில்லை. இந்தநிலையில் வீட்டின் அருகே கிணற்றில் சிறுமி மாலினி இறந்து கிடந்தார். கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

