ஆவணித் திருவிழா திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்

Published:

sddefault 8 - 2026

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், தேவியும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருகின்றனர்.

ஆவணித் திருவிழாவின் 8ஆம் நாளான நேற்று காலை 6 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சார்த்தி எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்து பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் பச்சை சார்த்தி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து இரவில் திருக்கோயில் சேர்ந்தார்.

ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை தேரோட்டம் நடக்கிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img