December 6, 2025, 5:06 AM
24.9 C
Chennai

சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்த்து நடிகர் சுரேஷ் கோபி தொடங்கிய போராட்டம்!

suresh gopi bjp mp - 2025

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த கண்மூடித்தனமான தீர்ப்பை அடுத்து, அதற்கு எதிராக கேரள மாநிலம் மற்றும் தென் மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது. ஹிந்துக்களின் உணர்வைப் புண்படுத்தியுள்ள இந்தத் தீர்ப்பை அடுத்து ஹிந்துக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்துவதையே தொழிலாகக் கொண்ட கம்யூனிஸ்ட்கள், கிறிஸ்துவர்கள் பின்னணியுடன் இயங்கக் கூடிய பெண்கள் சிலர், சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால், பக்தர்களின் போராட்டம் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்வோம் என பெண்கள் அமைப்புகள் சில போராடி வரும் நிலையில் அதே பெண்களில் சிலர் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பாதுகாப்புக் குழுவில் இருந்த பெண்கள் சார்பில் நேற்று தீபம் ஏற்றி போராட்டம் நடத்தினர். கேரளாவில் உள்ள களியக்காவிளையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை பிரபல மலையாள நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி தொடங்கி வைத்தார்.

தமிழகத்திலும் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலை காக்க விளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது. உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் மற்றும் இந்து அமைப்புகள், குருமார்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில், சபரிமலைக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி, மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விளக்கேற்றும் போராட்டம் நடைபெற்றது. கொடைக்கானலில் நேற்று மாலை மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயிலில் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ‘சபரிமலையை காப்போம்’ என, சரணம் கோஷம் எழுப்பி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories