கார்கள் அடுத்தடுத்து மோதியதில் ராஜபாளையம் மாணவிகள் உள்பட 4 பேர் பலி

mnp26acc 2610chn 31 4 - 2026

திருச்சி துவரங்குறிச்சி அருகே நடந்த பயங்கர விபத்தில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிகொண்டன. இதில் தனியார் கல்லூரி நிர்வாகி, 2 மாணவிகள் உள்பட 4 பேர் பலியானார்கள். திருச்சி துவரங்குறிச்சி அருகே நடந்த பயங்கர விபத்தில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிகொண்டன. இதில் தனியார் கல்லூரி நிர்வாகி, ராஜபாளையம் மாணவிகள் இருவர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

942634 12677020 - 2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கசாமி ( 67). இவரது மனைவி மங்கையர்க்கரசி (64). இவர்களது உறவினர்களான ராஜபாளையம் கவிமணிதேசியவிநாயகம் பிள்ளை தெருவை சேர்ந்த ராஜா மகள் பூஜா (20), ராஜபாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் மகள் ரஞ்சனா (20), பேரன் பிரதுன் (7) ஆகியோரை அழைத்துக்கொண்டு ராஜபாளையத்தில் இருந்து புதன்கிழமை மதியம் ஒரு காரில் புறப்பட்டு திருச்சியை அடுத்த நவல்பட்டில் உள்ள மருமகன் லட்சுமணன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். காரை தங்கசாமி ஓட்டி வந்தார்.

மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த செவந்தம்பட்டி விலக்கு அருகே கார் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் திருச்சி சுந்தரம் பிள்ளை தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (65), அவரது மனைவி பத்மா (60) ஆகியோர் காரில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு கிராமத்தை சேர்ந்த டிரைவர் மோகன் (45) என்பவர் ஓட்டினார்.

இந்தநிலையில் தங்கசாமி ஓட்டி வந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலை மையதடுப்பைத் தாண்டி எதிரே உள்ள சாலைக்கு சென்று, மோகன் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதனையடுத்து பின்னால் வந்த மற்றொரு காரும் அந்த கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கார்களின் இடிபாடுகளில் சிக்கி மங்கையர்க்கரசி, ரஞ்சனா, பூஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மோகன் ஓட்டிய காரில் வந்த பத்மா படுகாயத்துடன் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 4 பேர் படுகாயம் மேலும் படுகாயம் அடைந்த தங்கசாமி, அவரது பேரன் பிரதுன், ராமகிருஷ்ணன், டிரைவர் மோகன் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் அப்பகுதியில் விபத்தில் சிக்கிய கார்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. கல்லூரி சேர்மன் விபத்தில் இறந்த பூஜா, ரஞ்சனா ஆகியோர் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தனர். மேலும் விபத்தில் இறந்த பத்மா திருச்சி காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் சேர்மனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories