வேதாரண்யம் – மழையால் பாதித்த நெற்பயிர்கள்:முன்னாள் அமைச்சர் ஆய்வு

IMG 20230204 WA0067 - 2026

தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையால் பயிர்கள் சேதமடைந்து‌விவசாயிகள் பெரும் துயரத்திற்கு உள்ளாகினர். 

டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட  அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்வார்கள்.

நாளை மறுநாள் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவிடம் பயிர் சேத விவரங்களைப் பெற்று இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில் நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களை தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் இன்று கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 பிராந்தியங்கரை, வாய்மேடு,ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், மருதூர், கருப்பம்புலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் மழையில் சாய்ந்து, வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள நெற்கதிர்களை அவர் பார்த்தார்.

முள்ளியாறு,மணக்காட்டான் வாய்கால்,மாணங்கொண்டான் ஆறுகளில் மழை நீர் வடிவதை தடுத்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளையும் பார்த்தார்.

 பின்னர் முளைத்து வரும் நெற்கதிர் கொத்துகளை செய்தியாளர்களிடம் காட்டி அவர் கூறியதாவது 

 நெல் பாதிப்புக்கு நிவாரணமாக 2020-21-ல் ஏற்பட்ட பாதிப்பின் போது இப்போதய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிய ஹெக்டேருக்கு ரூ.75 ஆயிரதை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும்.

 நெற்பயிருக்கான காப்பீடு திட்டம் தொடர்பான மகசூல் மாதிரி கணக்கெடுப்பை மறு ஆய்வுக்குள்படுத்தி விவசாயிகளுக்கு நூறு சதவீதம் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories