December 12, 2025, 12:05 AM
23.7 C
Chennai

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

karur bjp senthil nathan kp ramalingam - 2025

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது ஜாதியை திணிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று, முன்னாள் எம்பி ராமலிங்கம் கரூரில் கேள்வி எழுப்பினார்.

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கரூருக்கு வருகை தர உள்ள கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் -க்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான முன்னாள் எம்பி ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த ராமலிங்கம், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் வருகிற 22 ஆம் தேதி கரூருக்கு வருகை தரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மற்றும் நிகழ்ச்சியை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதே போல ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் உள்ள நிர்வாகிகளை அழைத்து சட்டமன்ற மாநாடுகள் 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதே போல கரூரில் உள்ள நான்கு சட்ட மன்ற தொகுதிகளிலும் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை குறை சொல்வது என்பது தங்களது தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொள்வதற்கு சமமாகும், திமுகவினருக்கு ஆட்சியை விட்டு போகப் போகிறோம். என்ற பயமும் இயலாமையால் நடத்துகின்ற நாடகம், இனி வரப்போக இருக்கிற வழக்குகளிலும் தங்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் நீதிபதிகளை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு நீதிபதிகள் தான் சரியான தீர்வு காண வேண்டும். இன்று சுவாமிநாதன் என்ற தனி நீதிபதிக்கு ஏற்பட்ட நிலையாக கருதி விடாமல், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நீதிமன்ற நீதிபதிகளும் உணர வேண்டும் என்றார்.

மேலும், நீதிபதியை ஜாதியின் பெயரால் அவமதிப்பு செய்யக்கூடாது என்றும், ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி ஒரு நீதிபதியை ஜாதியின் பெயரை பெயரைப் பயன்படுத்தி ஸ்டாலின் கூறலாமா? எனவும், இந்தக் கேள்வி நாடு முழுவதும் தற்போது திரும்பி கொண்டு உள்ளது. ஆகையால் இப்படிப்பட்ட கேவலமான ஒரு ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகத்தான் எங்களது மாநில தலைவர் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

Topics

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

Entertainment News

Popular Categories