நல்லவர்களுக்கு ஓட்டு போடணுமாம்: விஜயகாந்த் வேண்டுகோள்

Published:

தஞ்சாவூர் :.

நடைபெற உள்ள தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியபோது, டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் தூர் வாரப் படாததால்தான், மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை உருவாகியுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இப்பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. வரும் தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று விஜயகாந்த் கூறினார்.

Related articles

Recent articles

spot_img