புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி

senthil balaji - 2026

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிந்திருந்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

கரூர் மாவட்ட அமமுக., சார்பில், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளை அனுப்பும் பணி நடைபெற்றது. இதில், பாய்கள், 5 கிலோ அரிசி சுமார் 5 ஆயிரம் சாக்குகள், வேஷ்டி, சட்டை, தண்ணீர் பாட்டில்கள் என்று சுமார் 7 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமமுக., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், புயல் பாதித்த மாவட்டங்களில் முதலமைச்சர் மக்களை தரை வழியாக சென்று பார்வையிட பயம் ஏற்பட்டதால் விமானம் வழியாக சென்றுள்ளார். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் தப்பிச் செல்லும் போது, அது மக்களின் கோபத்தினையும், அரசின் மீதுள்ள கோபத்தையும் தான் எதிரொலிக்கின்றது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

தமிழக அரசு ஒரு கண் துடைப்புக்காக வெற்று அறிக்கைகள் மூலமாகவே செயல்பட்டு வருகின்றது. புயல் பாதித்த இடங்களில் எந்த ஒரு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல், அரசு தவிக்கிறது. ஆகவே மக்கள் தக்க பாடத்தினை தேர்தல் நேரத்தில் வெளிக் கொணர்வார்கள்.

புயல் வருவதற்கு முன்னர் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது., புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகளில் மெத்தனம் காண்பிக்கப் படுகிறது. இந்த கஜா புயலை பொறுத்தவரை, எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. காரணம் அந்த அரசுக்கு தகுதி இல்லை. ஒருவேளை உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் கூட புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள்.

ஆனால் தேர்தல் நடத்துவதற்கு பயப்படும் இந்த எடப்பாடி அரசு நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறது.

செந்தில்பாலாஜியின் பேட்டி…

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories