Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஉள்ளூர் செய்திகள்புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி

புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி

- Advertisement -
- Advertisement -

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிந்திருந்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

கரூர் மாவட்ட அமமுக., சார்பில், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளை அனுப்பும் பணி நடைபெற்றது. இதில், பாய்கள், 5 கிலோ அரிசி சுமார் 5 ஆயிரம் சாக்குகள், வேஷ்டி, சட்டை, தண்ணீர் பாட்டில்கள் என்று சுமார் 7 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமமுக., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், புயல் பாதித்த மாவட்டங்களில் முதலமைச்சர் மக்களை தரை வழியாக சென்று பார்வையிட பயம் ஏற்பட்டதால் விமானம் வழியாக சென்றுள்ளார். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் தப்பிச் செல்லும் போது, அது மக்களின் கோபத்தினையும், அரசின் மீதுள்ள கோபத்தையும் தான் எதிரொலிக்கின்றது.

தமிழக அரசு ஒரு கண் துடைப்புக்காக வெற்று அறிக