டிடிவி தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம்: கேடி ராஜேந்திர பாலாஜி!

Published:

rajendra balaji admk minister - 2026

டிடிவி தினகரனைத் தவிர அதிமுகவில் யார் இணைந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவுக்கு எதிராக திமுக தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். அதிமுக பிளவுபட காரணமாக இருந்த டிடிவி தினகரனை தவிர்த்து அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைய யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெறுவது குறித்து ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார்.  

முன்னதாக, கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளியானது. அது குறித்து கருத்து தெரிவித்த அவர், நான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக பேசியதாக தவறான கருத்தை திமுகவினர் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.

சிறுபான்மையினர் வாக்குகளை பெற திமுகவினர் மிகவும் கீழ்த்தரமான எண்ணத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. இஸ்லாமிய மக்களை தூண்டும் விதத்தில் கலவரத்தை ஏற்படும் விதத்தில் கருத்து பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ammk admk partymen - 2026
அமமுக கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் சேர்ந்த நிர்வாகிகள் 18 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

என்னுடைய தொப்புள் கொடி உறவான என் முஸ்லீம் மக்களை அப்பு என்ற முறையில் உறவு கொண்டாடி வருகிறேன். என்னைப் பற்றி விருதுநகர் மாவட்ட முஸ்லீம் மக்களிடம் கேட்டு பாருங்கள். பின்பு திமுகவினர் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உங்கள் பொய் பிரச்சாரத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்… என்றார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இதனிடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், பொறுப்பில் இருந்து கொண்டு ராஜேந்திர பாலாஜி, பிறரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதாக குற்றம்சாட்டினார். இஸ்லாமியர்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்ததற்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img