சீமான் மீது நடவடிக்கை: காங். செயல் தலைவர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு!

seeman - 2026

‘தடை செய்யப் பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் தேர்தல் பிரசாரம் செய்துவரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயகுமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இது குறித்து ஜெயகுமார் கூறியவை…

‘ராஜீவை நாங்கள்தான் கொன்றோம்; தமிழ் மண்ணில் புதைத்தோம்’ என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதுடன், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் படத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்கிறார்; இது தேர்தல் விதிமீறல். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேட்டதற்கு ‘மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்’ என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

நாங்குநேரியில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வாக்குச் சாவடிகளை கைப்பற்ற திட்டம் தீட்டப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளேன்.

வாக்குச் சாவடிகளை கைப்பற்ற காவல் துறையை பயன்படுத்த ஆளும் கட்சி திட்டம் தீட்டியுள்ளது. எனவே வாக்குச் சாவடிகளில் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தோம்; அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories