“மாவடு ஊறுகாய்”

11071467_817047378349283_6674827151919026494_n “மாவடு ஊறுகாய்” எஸ்.மீனாட்சி அம்மாளின் பக்குவம் (பழைய கால புத்தகத்தில் இருந்து) தட்டச்சு-வரகூரான் நாராயணன். தேவையான சாமான்கள், 1) (மலை வடுவானால்) 48 கப்புகள் (12 லிட்டர்கள்) ,மாவடு 2)உப்பு- 8 கப்புகள் (2 லிட்டர்) 3)மிளகாய் வற்றல் அல்லது 2 கப்புகள் காரப்பொடி. 4)கடுகு 3 டீஸ்பூன்கள். 5)வரளிமஞ்சள்,விளக்கெண்ணெய் 3 டீஸ்பூன்கள். (தோப்பு வடுவானால்) 64 கப்புகள் (16 லிட்டர்) மாவடு உப்பு 8 கப்புகள் (2 லிட்டர்) காரப்பொடி 2 கப்புகள். கடுகு 4 டீஸ்பூன்கள் வரளி மஞ்சள் 4 விளக்கெண்ணெய் 4 டீஸ்பூன்கள் (கடுகையும்,மஞ்சளையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மாவடுவை ஜலத்தில் கொட்டி அலசி,அலம்பி, மூங்கில் கூடையில் வடியவைத்து, தாம்பாளத்தில் போட்டுக்கொண்டு விளக்கெண்ணெய்,கடுகு-மஞ்சள் அரைத்த விழுது இவைகளையும் போட்டுக் கலந்து கொள்ளவும். ஊறுகாய் போடும் ஜாடியை அல்லது பாத்திரத்தை நன்றாக துடைத்துக் கொண்டு, முதலில் ஒரு கை உப்பை அடியில் போடவும். அதன் மேல் நான்கு கை மாவடுவைப் போட்டு, ஒரு கை உப்பையும்,கொஞ்சம் காரப்பொடியையும் போடவும். அதே மாதிரி மாவடுவும்,உப்பும்,காரப்பொடியுமாகக் கடைசிவரை நிறவிப் போட்டு மூடி வைத்து, மறுநாள் போக மறுநாள் கலந்து எடுக்கவும்.உப்பு காரப்பொடி மிகுந்து போனால் மேலாகப் போட்டுவிடவும். (மிளகாயையும் இடித்துக்கொண்டு,கடுகு மஞ்சள் இவற்றை அரைத்து விளக்கெண்ணையையும் விட்டுப் பிசறிக் கலந்து, வடுவையும்,இடித்து வைத்துள்ள உப்பு-மிளகாயையும் போடலாம்) 8 கப்புகள் உப்புக்கு, 8 கப்புகள் ஜலத்தை விட்டு அடுப்பில் வைத்து உப்பு நன்றாகக் கரைந்து பாதி ஜலம் வற்றும் வரை நன்றாகக் காய்ச்சி, இறக்கி ஆறவைத்துக் கொண்டு இரண்டு கரண்டிகள் (1/3 கப்) உப்பு ஜலமும்,காரப்பொடியும்,வடுவுமாக முன் சொன்னபடி போட்டால், எத்தனை நாட்களானாலும் வடு அழுகாமல் நிறமாக இருக்கும். குறிப்பு; மாவடுவின் காம்புகளை முழுவதும் எடுக்காமல், அரைவிரல் நீளக் காம்புடன் போட வேண்டும். பொதுவாக எல்லா ஊறுகாய்களுக்கும், மிளகாய் வற்றலை மிஷினில் அரைக்காமல், உரலில் அல்லது கிரைண்டரில் இடித்துப் போட்டால், ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories