December 7, 2025, 4:21 PM
27.9 C
Chennai

அடிக்கடி தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக்..

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வை தாங்காத மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பைக் மீது மோகம் அதிகரித்து எலக்ட்ரிக் பைக் விற்பனை அதிகரிக்கும் நிலையில் இவைகள் அடிக்கடி தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளாவதால் உயிரிழப்பு பெரும் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

கடந்த மாதம் வேலூரில் வீட்டுக்குள் வைத்து எலக்ட்ரிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் போட்டபோது பைக் வெடித்து சிதறியது. இதில் தந்தை, மகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் நடந்த 1 மாதத்திற்குள் மேலும் 2 இடங்களில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது மனைவி, 2 மகள்கள் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம், விஜய சூர்யராவ்பேட்டை குலாபிபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (35), டி.டி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஆர்த்தி(30), மகள்கள் பிந்து (10), சசி(6). சிவக்குமார் நேற்று முன்தினம் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கினார்.

இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் சார்ஜ் செய்வதற்காக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக எடுத்து சென்று சார்ஜ் போட்டு வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினார்.அதிகாலை 3 மணியளவில் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. வீட்டில் உள்ள மின்சார ஒயர்களும் தீப்பிடித்து அறையில் இருந்து புகை வெளியேறியது.

இதில் தீக்காயமடைந்த சிவக்குமார் குடும்பத்தினர் அலறியடித்து எழுந்தனர். வீட்டில் இருந்து வெளியேற வழியில்லாமல், அவர்கள் சமையல் அறைக்கு ஓடிச்சென்று அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று படுகாயமடைந்த சிவக்குமார் மற்றும் குடும்பத்தினரை மீட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி ஆர்த்தி. மகள்கள் பிந்துஸ்ரீ, சசி ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆர்த்தி அபாய கட்டத்தில் உள்ளார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் பிரபலமாகி விற்பனை அதிகரிக்கும் நிலையில் எலக்ட்ரிக் பைக் பேட்டரிகள் தொடர்ந்து தீப்பிடித்து எரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப் பிரச்சினை க்கு அரசு தீர்வு காண வேண்டும் .

images 22 2 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories