உலகக் கோப்பை போட்டிகளை வரும் 19-ம் தேதி வரை தொடர்ந்து ஒளிபரப்பலாம் என்று தூர்தர்ஷனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, பிரசார் பாரதி இது தொடர்பாக மேல்முறையீட்டு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மேல் முறையீட்டுமனு விசாரணைக்கு வந்தது. அப்போது, தூர்தர்ஷன் கேபிள் ஆபரேட்டர் மூலம், போட்டிகளை ஒளிபரப்பினால் வருமான இழப்பு ஏற்படுவதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், தற்போதைய சூழலில் முடிவுகள் எடுத்தால் போட்டிகள் ஒளிபரப்புவதில் தடை ஏற்படும் என்றும் தனியார் சேனல்களும், தூர்தர்ஷனும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்குமாறும் கூறினர். இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், வரும் 19-ம் தேதி வரை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி அளித்தனர். மேலும், புதிய சேனல் தொடங்கி, கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப முடியுமா என்பது குறித்து பதில் அளிக்குமாறும் பிரசார் பாரதிக்கு உத்தரவிட்டனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை 19ம் தேதி வரை ஒளிபரப்பலாம்: தூர்தர்ஷனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari