January 19, 2025, 9:43 AM
25.7 C
Chennai

உன்மத்தன் வம்பு

உன்மத்தன் வம்பு!

கமால் பாஷா ஞானம்
டமால் என்றே வெடித்தது
தமிழ் நாட்டின் மானம்
தடால் என்றே கவிழ்ந்தது.

கற்பனைக் கதையிது,
விற்பனைக் கல்ல!
எச்சரிக்கை எச்சரிக்கை!

சொற்போர் எனல் வேண்டாம்
கற்போரே உமக்கு மட்டும்!
எச்சரிக்கை எச்சரிக்கை!

காலை வெளிச்சத்தில்
உதித்த கவிதையிது…
மாலை மயக்கத்தில்
மரித்த மனிதமிலை!

தவமிருந்து பெற்றபிள்ளை
தறுதலையாய் போகுதென்றால்
தாய் இருந்த தவத்தினிலே
தவறெதுவும் இல்லையடா

வரும்லட்சுமி என்றே வசனம்பேசி
வலிந்து அழைப்பான்
வந்தபின்னே வாசல் வழிதிறந்து
ஊர்மேயப் போவான்
வா நீ வா நீ என்றே
வருந்தி அழைப்பான்
வந்தவள் வாசம்கண்டபின்
போ நீ போ நீ என்றே
துரத்தி அடிப்பான்
எச்சரிக்கை எச்சரிக்கை

மஞ்சத்தில் சாய்ந்தவளின்
கெஞ்சல் மொழி கேட்பான்
சரி சரி என்றே தலைசாய்ப்பான்
சரிவு கண்டால்
கா எனச் சொல்லி
கழற்றிடுவான் எச்சரிக்கை!

பாத்திரமோ இருள் வேடம்
பாத்திறமோ பகல் வேடம்
சத்தியமாய் பேசும்மனம்
சத்தியமாய் இல்லையென
நித்தியமாய் கண்டுவிடு
எச்சரிக்கை எச்சரிக்கை

ALSO READ:  Thejas foundation arranged for a Gana and Jata parayanam in Chennai on Dec. 10th

பத்தியமாய் அவருமில்லை
பைத்தியமாய் நாமுமில்லை
வைத்தியமே தேவையடா
வையத்தை வாழ்விக்க!

சத்திரத்துச் சரக்கொன்றை
வித்துவிடத் துடிக்கின்றார்
பத்திரமாய் உம்மனத்தை
வைத்திருங்கள் எச்சரிக்கை!

கத்திக்கத்திக் கதைத்தாலும்
காத்தாமுட்டி கேட்குதில்லை
சொத்துசுகம் எல்லாமும்
சொர்க்கத்தைத் தந்திடுமோ?
எச்சரிக்கை எச்சரிக்கை!

பாப்பான் கேட்பான் என்றே பயத்தால்
விப்பான் விம்முவான்
எச்சரிக்கை எச்சரிக்கை

கறுப்புச் சட்டத்துள் தானாய் நுழைந்து
வெறுப்புச் சாட்டையால் தாயைப் பழிப்பான்
எச்சரிக்கை எச்சரிக்கை!

கறுப்புக்குள்ளே புகுந்ததாய் எண்ணி
வெளுப்பைத் தொலைத்த வீரன்வரான்
எச்சரிக்கை எச்சரிக்கை!

அந்தி வந்த பின்னே
முந்தி மட்டும் தேடும்
சிந்தை தொலைந்த சிறுவன்
வாந்தி எடுத்ததெல்லாம்
சொந்த வார்த்தையல்ல;
நொந்த மனிதன் காட்சி!
ஓய்ந்த மனதின் சாட்சி!

எச்சரிக்கை எச்சரிக்கை
எச்சரிக்கை எச்சரிக்கை!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

4 COMMENTS

  1. வாஞ்சிநாதன் ஊர்காரராச்சே ! இந்த ஆஷ் துறைக்கு இது போதும் ! கவிதை சூப்பர் !

  2. கவிதை முப்போகம் விளையட்டும்…

  3. வாஞ்சிநாதன் ஊர்காரராச்சே ! இந்த ஆஷ் துறைக்கு இது போதும் ! கவிதை சூப்பர் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.