ஸ்டாலின் பாத யாத்திரையே போனாலும், வேப்பிலை கட்டி ஆடினாலும்… இந்து விரோதியே: காயத்ரி ரகுராம் டிவீட்!

Published:

gayathri-raghuram
gayathri-raghuram

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவியின் உத்தரவுப் படி, பாத யாத்திரையே போனாலும், வேப்பிலை கட்டி ஆடினாலும்… இந்து விரோதியே என்று, பாஜக.,வின் காயத்ரி ரகுராம் டிவீட் பதிவு செய்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவு:

தினம் ஒரு நாடகம் நடத்தும் ஸ்டாலின் தனது மனைவி துர்காவின் உத்தரவுப்படி ஐ பேக் குழு ஏற்பாட்டில் நாளை தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன் பாளையம் கொங்கு திருப்பதி பெருமாள் கோவிலுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பில் நடந்து வந்து சாமி தரிசனம் செய்து விபூதி பூசி குங்குமம் இட்டு பத்திரிகையாளர்கள் முன்பு போஸ் கொடுத்து தான் இந்து விரோதி அல்ல என நாடகமாடி இந்துக்களை ஏமாற்ற திட்டமிட்டுள்ளார்.

ஸ்டாலினே நீங்கள் பாத யாத்திரையே போனாலும் வேப்பிலை கட்டி ஆடினாலும் சரி திமுக இந்துக்களின் விரோதி என்பதை ஒருகாலும் மறக்கமாட்டோம் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்

ஜன.2 அன்று, பரமேஸ்வரன் பாளையத்தில் கொங்கு திருப்பதி கோயிலில் நடைபெறவுள்ள ஸ்டாலினின் கிராமசபைக் கூட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி, இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட ஒன்றிய தலைவர் ஏ.வி. லெவின் குமார், கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இது குறித்த புகார் மனுவையும் தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார் காயத்ரி ரகுராம்!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img