அதிமுக வேட்பாளராக தென்னரசுவை ஓபிஎஸ் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா?..

thennarasu 3 - 2026

அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா? பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்  இன்று இரவு இதற்கான விடை தெரிந்துவிடும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு என்றும், அவருக்கு ஆதரவு தெரிவித்து பொதுக் குழு உறுப்பினா்கள் இன்று இரவுக்குள் கடிதம் அளிக்க வேண்டும் என்றும் அக் கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் சனிக்கிழமை அறிவித்திருந்தார்.

அதிமுகவில் பிரிந்து செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளா்களை அறிவித்து செயல்பட்டு வந்தனா்.இந்நிலையில், இடைத்தோ்தல் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீது சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் வேட்பாளரை பொதுக் குழு மூலம் தோ்வு செய்ய வேண்டும். பொதுக் குழுவை உடனே கூட்ட முடியாவிட்டால், உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அதன்மூலம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த முடிவை அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் தோ்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இருவருமே ஏற்றுக்கொண்டனா். அதைத் தொடா்ந்து, அவைத் தலைவரான தமிழ்மகன் உசேன், உச்சநீதிமன்றம் ஆணையின்படி, அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ். தென்னரசு. அதற்கு ஒப்புதல் பெற பொதுக் குழு உறுப்பினா்கள் 2665 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கையை முறையாக பூா்த்தி செய்து, இன்று இரவு 7 மணிக்குள் சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக் கழகமான எம்ஜிஆா் மாளிகையில் சோ்த்துவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாகவும், இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது பற்று கொண்ட தொண்டா்களும், என் மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம் என்று ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை கூறியுள்ளாா்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற பதிலை அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ். தென்னரசு. அதற்கு ஒப்புதல் பெற பொதுக் குழு உறுப்பினா்கள் 2665 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

தங்கள் தரப்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்மொழிந்துள்ள அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற பதிலை இன்று மாலை 7 மணிக்குள் அளிக்குமாறும்,  தென்னரசுவை ஆதரிக்க சம்மதம் எனில் ஒப்புதல் அளிக்கிறேன் எனவும், இல்லையெனில், மாற்று வேட்பாளர் பெயரை வாக்குச் சீட்டில் குறிப்பிட வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. 

அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளராக தென்னரசுவை ஓபிஎஸ் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா?
என்று பலரும் ஆருடம் பார்க்கும் நிலையில் இதற்கு விடை இன்று  இரவு 7 மணிக்குள் தெரிந்துவிடும்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories