தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அண்ணாமலை

annamalai2.jpeg - 2026

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எந்தெந்த மசோதாக்கள் கவர்னரிடம் நிலுவையில் உள்ளன என்பது குறித்து அண்ணாமலை விளக்கி உள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதில் தி.மு.க.வின் பங்கு என்னென்ன என்பதை பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. பேசியிருக்கிறார். உண்மையில் தி.மு.க.வின் பங்கு என்னென்ன என்று பார்ப்போம். சமீபத்தில் புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. அமைச்சர் ஒருவர் பொது மேடையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதி ஒருவரை சாதி பெயரைக்கூறி இழிவுபடுத்தியதைக் கண்டோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது கொடிகளை ஏற்றவிடாமல் தடுப்பது, தி.மு.க. ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. 20 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவதாகக் கனிமொழி கூறியிருக்கிறார்.

ஆனால், 15 மசோதாக்கள் தான் நிலுவையில் உள்ளன. தமிழக முதலமைச்சர் தன்னைத்தானே பல்கலைக்கழக வேந்தராக நியமித்த 12 மசோதாக்கள், அரசாங்கத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தம் தொடர்பான ஒரு மசோதா, எந்தவொரு தனியார் கல்லூரியையும் கையகப்படுத்த விரும்பும் தமிழக அரசாங்கத்தின் விதியை திருத்தும் ஒரு மசோதா, ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான மசோதா என 15 மசோதாக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி கனிமொழி குறிப்பிடுகிறார்.

ஆனால் அவரது கட்சியோ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்த தி.மு.க,.அதை மறந்து விட்டது. தமிழக அரசில், இளைஞர்களுக்கு 5½ லட்சம் வேலை வழங்குவதாக தி.மு.க. அளித்த வாக்குறுதி பற்றி எந்த செய்தியும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே 2 லட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைக்கான ஆணையை வழங்கியுள்ளார். சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு என்ற தி.மு.க. எம்.பிக்களின் வழக்கமான திசை திருப்பும் உரைகளை விட்டு விட முடியாது.

தி.மு.க., ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த காலமான 2006– 2014-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ரூ.675.36 கோடியும், தமிழுக்கு ரூ.75.05 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஏன் இந்த வித்தியாசம் என்பதை தி.மு.க. விளக்க வேண்டும். தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கனிமொழி கூறியிருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் ஒதுக்கப்பட்டதை 2023-24-ம் நிதியாண்டில், தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்து 961 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories