தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அண்ணாமலை

annamalai2.jpeg - 2026

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எந்தெந்த மசோதாக்கள் கவர்னரிடம் நிலுவையில் உள்ளன என்பது குறித்து அண்ணாமலை விளக்கி உள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதில் தி.மு.க.வின் பங்கு என்னென்ன என்பதை பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. பேசியிருக்கிறார். உண்மையில் தி.மு.க.வின் பங்கு என்னென்ன என்று பார்ப்போம். சமீபத்தில் புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. அமைச்சர் ஒருவர் பொது மேடையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதி ஒருவரை சாதி பெயரைக்கூறி இழிவுபடுத்தியதைக் கண்டோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது கொடிகளை ஏற்றவிடாமல் தடுப்பது, தி.மு.க. ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. 20 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவதாகக் கனிமொழி கூறியிருக்கிறார்.

ஆனால், 15 மசோதாக்கள் தான் நிலுவையில் உள்ளன. தமிழக முதலமைச்சர் தன்னைத்தானே பல்கலைக்கழக வேந்தராக நியமித்த 12 மசோதாக்கள், அரசாங்கத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தம் தொடர்பான ஒரு மசோதா, எந்தவொரு தனியார் கல்லூரியையும் கையகப்படுத்த விரும்பும் தமிழக அரசாங்கத்தின் விதியை திருத்தும் ஒரு மசோதா, ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான மசோதா என 15 மசோதாக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி கனிமொழி குறிப்பிடுகிறார்.

ஆனால் அவரது கட்சியோ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்த தி.மு.க,.அதை மறந்து விட்டது. தமிழக அரசில், இளைஞர்களுக்கு 5½ லட்சம் வேலை வழங்குவதாக தி.மு.க. அளித்த வாக்குறுதி பற்றி எந்த செய்தியும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே 2 லட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைக்கான ஆணையை வழங்கியுள்ளார். சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு என்ற தி.மு.க. எம்.பிக்களின் வழக்கமான திசை திருப்பும் உரைகளை விட்டு விட முடியாது.

தி.மு.க., ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த காலமான 2006– 2014-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ரூ.675.36 கோடியும், தமிழுக்கு ரூ.75.05 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஏன் இந்த வித்தியாசம் என்பதை தி.மு.க. விளக்க வேண்டும். தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கனிமொழி கூறியிருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் ஒதுக்கப்பட்டதை 2023-24-ம் நிதியாண்டில், தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்து 961 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு போட்டிகளின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது குறித்து முடிவு எட்டின.

பஞ்சாங்கம் மார்ச் 2 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு போட்டிகளின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது குறித்து முடிவு எட்டின.

பஞ்சாங்கம் மார்ச் 2 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில்...

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

Entertainment News

Popular Categories