தகுதியான பெண்களுக்கு ரூ ஆயிரம் தி.மு.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி-குஷ்பு..

images 65 - 2026

தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட செய்தி குறித்து ஒரு அரசு என்பது எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும். தகுதியான பெண்களுக்கு ரூ ஆயிரம் என கூறி தி.மு.க. தனது பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த விசயத்திலும் காட்டி உள்ளது என பாஜக குஷ்பு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினரும் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-

வாய் ஜாலத்தில் தி.மு.க.வினர் கில்லாடிகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. எப்போதுமே தி.மு.க.வின் பேச்சு ஒரு மாதிரி இருக்கும். செயல் வேறு மாதிரி இருக்கும். அதே போலத்தான் தேர்தல் நேரத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதை நம்பி வாக்களித்த மக்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 3 கோடியே 60 லட்சம் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் 80 லட்சம் பேரை தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்து உரிமைத்தொகை வழங்க இருக்கிறார்களாம். அப்படியானால் 2½ கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை பெறுவதற்கு உரிமை இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

எந்த தகுதியின் அடிப்படையில் பெண்களை பிரித்தீர்கள்? தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லி இந்த பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். வறுமை கோட்டை தாண்டி விட்டார்களா? வசதியான வாழ்க்கை வாழுகிறார்களா? எதை அடிப்படையாக வைத்து தகுதியை நிர்ணயித்தீர்கள்? தேர்தல் நேரத்தில் இதை நேரடியாக சொல்லி இருக்கலாமே.

சொன்னால் வாக்கு விழாது என்ற பயம். அதனால் தான் பொய்யான வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி பேசி ஏமாற்றி இருக்கிறது. ஒரு அரசு என்பது எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும். ஆனால் தி.மு.க. தனது பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த விசயத்திலும் காட்டி உள்ளது. இதற்கு பெண்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories