வக்ப் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்; சட்டத்தின் சிறப்பம்சம் என்ன?

president draupati murmu - 2026
#image_title

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ப் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 

வக்ப் வாரிய சட்டங்களில் பல ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு சாமானிய மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ப்சட்டத் திருத்த மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்றிரவு ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து இந்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது. 

முன்னதாக, வக்ப் சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட போது, எதிர்க்கட்சியினர் கடும் விவாதங்களை முன்வைத்தனர். அதற்கு ஆளும் பாஜக., தரப்பில் இருந்து அமைச்சர்கள் பதில் கொடுத்தனர். எனினும், வக்ப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர். 

இந்நிலையில் வக்ப் சட்டத்திருத்த மசோதா குறித்த தெளிவினை ஏற்படுத்த அரசுத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வக்ப் திருத்த மசோதா 2024-ன் முக்கியமான நன்மை தரும் அம்சங்கள் எவை? 

1. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிப்பு

வக்ப் வாரியங்களுக்கு கடுமையான கணக்கெடுப்பு மற்றும் நிதி வெளிப்படுத்தல் கட்டாயம் செய்யப்படுகிறது. CAG அல்லது மூன்றாவது தரப்பினரால் வழக்கமான ஆடிட் நடத்துவதன் மூலம் மேல் கண்காணிப்பு மற்றும் மோசடி தடுப்பு உறுதி செய்யப்படுகிறது.

2. தகவல் தெளிவுக்கான டிஜிட்டலாக்கம்

வக்ப் சொத்துகளின் பதிவுகளை டிஜிட்டல் வடிவமாக மாற்றும் முயற்சியை வலுப்படுத்துகிறது. இதனால் தெளிவாக அறிதல் மற்றும் மறு பயன்பாட்டைத் தடுப்பது சாத்தியமாகிறது. மேலும், இணையதளத்தில் தகவல்களை எளிதில் பார்க்க மக்களுக்கு வழிவகை செய்கிறது.

3. துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்தல் தடுப்பு

புதிய மற்றும் வலிமையான சட்டம் வக்ப் நிலங்களில் ஆக்கிரமிப்பு (encroachment) நடத்துவதைத் தடுக்கும். வாரியங்களுக்கு சொத்துக்களை பாதுகாக்க வேகமான நடவடிக்கை எடுக்க உரிமை வழங்குகிறது.

4. சொத்துக்களின் தீர்க்கமான பயன்பாடு

வக்ப் நிலங்களை கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறைகளில் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இது வக்ப் சொத்துகளின் தான தர்ம நோக்கினை சரியாகப் பூர்த்தி செய்கிறது.

5. நிறுவன மேலாண்மை மறுசீரமைப்பு

வக்ப் வாரியத்தில் தகுதியான நபர்களை நியமிக்க புதிய நடைமுறைகள். அரசியல் புலம்பெயர்வை குறைத்து சீரான நிர்வாகத்தை உறுதி செய்யும் வாய்ப்பு.

6. தான தர்ம நோக்கங்களை பாதுகாத்தல்

தானம் செய்த நபர்களின் நோக்கத்திற்கு ஏற்ப சொத்துக்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வாரியத்தின் பொறுப்பை வலுப்படுத்துகிறது. இது வக்ப்பின் மத மற்றும் சமூக நம்பிக்கையை பாதுகாக்க உதவுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories