December 5, 2025, 11:23 AM
26.3 C
Chennai

காஞ்சி கோயிலின் பழமையான கட்டிடங்களை இடித்து அட்டூழியம்; இந்து முன்னணி அறப் போராட்டம் நடத்தும்!

kadeswara subramaniam hindu munnani - 2025

காஞ்சீபுரம் அத்திவரதர் கோயிலில் ஆகம விதிகளை மீறி பன்னெடுங்கால பழமையான கட்டிடங்களை இடித்து அட்டூழியம் நடப்பதாகவும் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ள அறநிலையத்துறை தக்க நடவடிக்கை இல்லையெனில் அறப்போராட்டம் தொடங்கும் என்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற அத்திவரதர் புகழ்
காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி பெருமாள் கோவில் உலகப் புகழ்பெற்றது.

அத்தையை பெருமைமிகு திருக்கோவிலில் HR&CE துறையின் சட்டவிரோத நிர்வாகம், கோயில் கட்டமைப்புகளை அழித்தல் , பக்தர்களின் உரிமைகளை மீறுதல் மற்றும் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன.

  1. உயர் நீதிமன்றத்தின் ‘Status Quo’ உத்தரவை மீறி, அறநிலையத்துறை ஊழியர் ‘செயல் அதிகாரியாக’ சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்.
  2. ஆகமம் மற்றும் கட்டமைப்பு விதிகளுக்கு முரணாக, அபாயகரமான சாய்தளம் கட்டப்பட்டு, வரலாற்று சிறப்புமிக்க சாளரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  3. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மை மிக்க கோவிலின் பணிகளுக்கு இந்திய தொல்பொருள் துறையின் (ASI) ஒப்புதல் பெறவில்லை. அவர்களது வழிகாட்டுதல் இல்லாமல் சீரமைப்புபணிகள் நடத்தப்படுவது அப்பட்டமான விதிமீறல்.
  4. நீதிமன்ற உத்தரவை மீறி புனித தீர்த்தமான அனந்த சரஸ் குளம் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில் மஹாளயபட்ச அமாவாசை அன்று பக்தர்களுக்கு பெரும் இடையூறுகளை அறநிலையத்துறை ஏற்படுத்தியது.

5 . 2014-இல் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட ‘கட்டாய தரிசன டிக்கெட்’ மீண்டும் பக்தர்களிடம் விற்கப்படுகிறது.

  1. பக்தர்களிடம் ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
    இன்னும் பல வகையிலான அத்துமீறல்களும் நடந்து வருகிறது.

எனவே உடனடியாக ,

  1. சட்டவிரோத செயல் அதிகாரியை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும்.
  2. அனைத்து சட்டவிரோத கட்டுமானப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  3. அனந்த சரஸ் தீர்த்தக்குளம் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட வேண்டும்.
  4. கட்டாய தரிசன டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட வேண்டும்.
  5. கோயில் ஊழல் மற்றும் கலைப்பொருட்கள் சேதம் தொடர்பான வழக்குகளில் CBCID மற்றும் Idol Wing போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
  6. 1941-ஆம் ஆண்டு நிர்வாகத் திட்டப்படி, தகுதியான அறங்காவலர்களைக் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும்.

“ஒரு புனிதத் தலத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதும், ஆகம மரபுகள் அழிக்கப்படுவதும், பக்தர்கள் துன்புறுத்தப்படுவதும் மிகவும் வருந்தத்தக்கது,”
ஆகவே அரசு தலையிட்டு
கோயிலின் புனிதத்தையும், பக்தர்களின் உரிமைகளையும் காக்க
தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அத்திவரதனாகிய் தேவராஜ சுவாமி கோவிலைக் காக்க மக்கள், பக்தர்கள் ஆதரவுடன் அறப் போராட்டத்தை இந்துமுன்னணி கையிலெடுக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories