லயோலா.,வின் திட்டமிட்ட அவதூறு! பிரச்னை வந்தால் ஹிந்து ‘ராம்’ பார்த்துக் கொள்வாராம்! தேர்தல் நோக்கில் திமுக., கைகோப்பு!

loyola college art2 - 2026

சென்னை: லயோலா கல்லூரியில் ஜன.19,20 ஆம் தேதிகளில் நடைபெற்ற கலைக் கண்காட்சியில் பாஜக., ஆர்.எஸ்.எஸ்., நாட்டின் ஸ்வச் பாரத் -தூய்மை இந்தியா திட்டம், மோடி, இந்து கடவுளர் அவமதிப்பு என்று பல அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுத்து ஓவியக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இது இப்போது பெரிய அளவில் பிரச்னையாக வெடித்துள்ளது.

நக்சல் சார்பு இயக்கங்களான, மக்கள் கலை இலக்கியப் பேரவை, மே 17 இயக்கத்தின் கலைக்குழு, செங்கொடி குழு, பாரதிராஜாவின் தமிழர் பண்பாட்டுக் கலை இலக்கியப் பேரவை, டைரக்டர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் பிளாக்–ஷீப் என்ற யூடியூப் சேனலை நடத்துபவர்களும்தான் லயோலாவில் நடந்த நாடகங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

முன்னதாகவே திட்டமிட்டு பல்வேறு ஆலோசனைகளையும் மேற்கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது. லயோலா கல்லூரியின் மேலிட திட்டமிடலுடன், வந்தால் பார்த்துக் கொள்வோம் என்ற கோஷத்துடன் தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது தெரியவருகிறது.

மேலும், இந்து இயக்கங்கள் இது தொடர்பாக ஏதேனும் வழக்கு தொடுத்தாலோ, புகார்களை அளித்தாலோ, இதற்காக கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிஸ பாஜக., என்றும், மோடி அரசு என்றும் பிரசாரம் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு பிரச்னைகள் வந்தால், கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாகப் போர்க்கொடி துாக்க வேண்டும் என்றும், உடனடியாக தி ஹிந்து பத்திரிகையின் ‘ராம்’ தலைமையிலான ‘பத்திரிகை சுதந்திர அமைப்பு’ மூலம் கண்டனம் வெளியிட்டு, இதையே தேர்தல் லாப நோக்கிலான புதிய அரசியல் போர்க்களமாக மாற்றிவிட வேண்டும் என்றும் விவாதிக்கப் பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பே, இது குறித்த பேச்சுகள் மற்றும் அடுத்த கட்ட பிளான் குறித்தும் விவாதங்கள் நடந்திருக்கின்றன.

லயோலா கல்லூரி விவகாரத்தையே கையில் எடுத்துக் கொண்டு, திமுக., சார்பு அரசியல் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. ஆளும் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பிரசார ரீதியில் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து, காவல் துறையிடம் சென்று புகார் கூறினார்லும், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட முடியாது என்றும், அப்படியே எடுத்தாலும், அதை திமுக., அரசியல் நோக்கில் பார்த்துக் கொள்ளும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories