spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryசிவகாசியில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை..

சிவகாசியில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை..

- Advertisement -

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் இதில்,

பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது.

பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசு மாற வேண்டும் இதனால் யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக் கூடாது.

பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தினால தொடர்பு.
பிஜேபி தொடர்ந்து பட்டாசு வெடிப்பது விரும்புகிறது வெடிக்கவும் சொல்கிறது.7 லட்சம் தொழிலாளர்களின் வீடுகளில் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளது.

வாகனம் ஓட்டுவது நாள் கூட சுற்றுச்சூழல் மாசுபடுகிறது இதை கட்டுப்படுத்துவது சமுதாயத்தின் கடமை –

பட்டாசு யாரும் வெடிக்க வேண்டாம் என சில விஷமத்தன்மையான எண்ணங்களை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சிலர் கொண்டுள்ளது வேதனை அளிக்கிறது.

பட்டாசு என்பது 2000 ஆண்டு நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு.

தீபாவளிக்கு ஒரு நாள் மட்டும் நாம் பட்டாசு வெடிப்பதனால் மாசு ஏற்படுவது என்பது ஏற்க முடியாது.ஒரு சில மாநிலங்களில் தீபாவளியில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படக்கூடிய பொலியூஷனை விட அதிகமாகவே மற்ற மாநிலங்களில் இருக்கிறது.

பட்டாசு உற்பத்தியாளர்.விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவாக நிற்பது ஒவ்வொரு தமிழர்களின் கடமை –

மத்திய அரசு பட்டாசு உற்பத்திக்கு நிரந்தர தீர்வு வாங்கி கொடுப்பதை உறுதியாக உள்ளது.

இந்த முறை யாரும் பட்டாசு விற்பனை மீது நடவடிக்கை எடுத்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிகளில் மத்திய அரசு போராடி நடவடிக்கை எடுத்தது.

அனைத்து அரசியல் கட்சிகளும் பட்டாசு விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.

அதிமுகவில் கூட்டணி என கருத்து குறித்த கேள்விக்கு

அதிமுக என்பது ஒரு பெரிய வலுவான கட்சி.அதில் யாரு தலைவராக இருக்க வேண்டும் என முடிவெடுப்பது ஒவ்வொரு தொண்டர்களின் கடமை அவர்கள் அதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.யார் இருக்கணும் யாரை இணைக்கணும் என்று நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

அதிமுகவை நாங்கள் நிர்பந்திக்க போவதில்லை இப்படி இருங்கள் என்று கூறப்போவதுமில்லை அது தொண்டர்களின் விருப்பம்.

அமைச்சர் பொன்முடியின் மகன் தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு.

அவர் பல பொறுப்புகளில் இருந்து தற்போது பதவிக்கு வந்துள்ளார் .இது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது.

திமுக தொடர்ந்து 40 க்கு 40 வெற்றி பெறுவோம் என்ற கேள்விக்கு

40க்கு 40 என்று சொல்லும் அளவிற்கு எங்கேயும் இல்லை .மக்கள் அதிருப்தி அதிகமாக உள்ளது விலையேற்றம் உள்ளது.
20 க்கு 20 என இல்லை 15 க்கு 15 கூட வாய்ப்பே இல்லை.
அதிருப்தி என்பது அதிகமாக உள்ளது இந்த ஆட்சி மீது மக்களுக்கு என்றார் அண்ணாமலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,132FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,904FollowersFollow
17,200SubscribersSubscribe