February 16, 2025, 3:32 AM
25.2 C
Chennai

ஸ்ரீவிலி-முதல் வனத்துறை மோப்பநாய் மரணம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்திற்காக முதன் முதலாக வனத்துறைக்கு என வாங்கப்பட்ட மோப்பநாய் உடல்நல குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையின் 9 வயது பெண் மோப்ப நாய் சிமி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது.வனத்துறையினர் அஞ்சலியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறைக்கு கடந்த 2015ல் மத்திய பிரதேசம் போபாலில் இருந்து மோப்பநாய் சிமி கொண்டு வரப்பட்டது.இதற்கு வனப்பகுதி குற்றங்களை தடுக்க டெல்லியில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையிடம் தமிழகத்தில் முதல் முதலாக ஒப்படைக்கப்பட்டது.

மோப்பநாய் சிமியை கடந்த 8 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பாளர் பெரியசாமி பயிற்சி அளித்து பராமரித்து வந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனத்துறை குற்றங்களை கண்டறியவும்,சமூக விரோதிகளை கண்டறியவும்,வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதும் மோப்பநாய் சிமி பணியாற்றி வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கில் யானை வேட்டையில் ஈடுபட்ட கும்பலை பிடிப்பதற்கு சிமி பெரும் உதவியாக இருந்தது.

இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதினை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மோப்பநாய் சிமி மற்றும் காப்பாளர் பெரியசாமிக்கு தந்து கௌரவித்தார்.கடந்த 2022 ஆம் ஆண்டு இரவு சதுரகிரியில் கன மழை பெய்தபோது நீர் வரத்து ஓடைகளை கடக்க சிரமப்பட்ட பக்தர்கள் இருக்கும் இடத்தை கண்டறிவதில் உதவியது.

தற்போது ஒன்பது வயது ஆகும் இந்த சிமிக்கி வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளும் வந்துள்ளது தற்போது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்படாமல் உள்ள சிமிக்கி திருநெல்வேலி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி மோப்பநாய் சிமி குறித்து வனத்துறை சேர்ந்த அதிகாரி விரைவில் தமிழகத்தின் முதல் மோப்ப நாயான சிமிக்கி பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் சிமியின் பராமரிப்பாளரான வனத்துறை ஊழியர் பெரியசாமி வீட்டில் உணவு வைத்துவிட்டு அதற்கு செய்ய வேண்டிய வழக்கமான பணிகளை செய்துவிட்டு சென்றார். காலை நாயை வந்து பார்க்க கதவு திறந்து போது நாய் பரிதாபமாக இறந்து கிடந்தது. வனத்துறைக்கு என்று முதன் முதலில் வாங்கப்பட்ட இந்த மோப்பநாய் சிமியின் உடல் வனத்துறை வளாகத்திலேயே உரிய வனத்துறையினரின் மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்வதற்கு முன் கால்நடை மருத்துவர் சுப்பிரமணியன் அதன் உடலை பரிசோதனை செய்தார்.

தமிழகத்திற்க்கு முதன் முதலாக வனத்துறைக்கு என்று வாங்கப்பட்ட மோப்பநாய் சிமி பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் படைத்துள்ளது என்பதும் மோப்பநாய் சிமி இறந்தது வனத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

Topics

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Entertainment News

Popular Categories