‘மதி இறுக்கம்’ என்றழைக்கப்படும் ஆட்டிசம்..

images 2023 04 02T115237154 - 2026
#image_title

தமிழில் ‘மதி இறுக்கம்’ என்றழைக்கப்படும் ஆட்டிசம் என்பது மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடாகும். இது ஒரு வயது முதல் 3 வயது குழந்தைகள்தான் பெரும்பாலும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

உலகளவில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் இந்தியாவில் 100-க்கு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது. அதுவும் ஆண் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த குறைபாடு உள்ள குழந்தைகளின் பேச்சு, நடத்தை, மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் சில செயல்களை மட்டும் திரும்ப, திரும்ப, செய்துகொண்டிருப்பார்கள்.

ஆட்டிசம் குறைபாட்டின் அறிகுறிகள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதில் 6 மாத குழந்தைக்கு அறிகுறியாக புன்சிரிப்பு இல்லாமல் இருத்தல், மற்றவர்களை கண்ணோடு கண் பார்க்காமல் இருத்தல் இருக்கும் 9 மாத குழந்தைக்கு அக்கம்பக்கத்தில் ஒலிக்கும் சத்தங்களை உணராமை, மற்றவர்களின் முகபாவனைகளை உணராமை போன்றவை இருக்கும்.

ரன்னர்மேலும் தனியாக இருக்க விரும்புவது, பேசுவதில் தாமதம், பேசியதையே திரும்ப பேசுதல், ஒரு செயலை மீண்டும் செய்தல் ஆகியவை அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

கருவுற்ற பெண்கள் மன அழுத்தம், தைராய்டு பிரச்சினை, போலிக் அமிலம் குறைவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு வர வாய்ப்புள்ளதாம். ஆட்டிசத்தை முற்றிலும் குணப்படுத்துவது சற்று கடினம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் குறைபாட்டை கண்டறிந்து டாக்டரின் வழிகாட்டுதல், தொடர் சிகிச்சைகளால் உடல்நலத்தில் பெரிய முன்னேற்றம் காணலாம்.

குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாட்டை கண்டறிந்தால் மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களை மிகுந்த அன்போடும், அக்கறையோடும் பெற்றோர் நடத்துவது அவசியம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி பெற்றோர் நம்பிக்கையுடன் காட்டும் அக்கறையும் குணப்படுத்த வல்லது.

இதற்கிடையே பெரும்பாலான மக்களிடையே ஆட்டிசம் குறைபாடு பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் இல்லை. அந்த வகையில் பொதுமக்களிடையே ஆட்டிசம் குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமான இன்று அதனை பற்றி தெரிந்துகொண்டு ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவ முன்வருவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories