டெங்குவை உற்பத்தி செய்யும் அரசுத் துறைகளுக்கு அபராதம் விதிப்பது யார்?

dengue musquto - 2026

டெங்கு கொசு அபராத விதிப்பில், அரசின் போங்கு ஆட்டம் நன்றாக வெளித்தெரிகிறது. மக்களுக்கு அபராதம் விதிக்கும் அரசுத் துறைகளுக்கு யார் அபராதம் விதிப்பது என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்!

டெங்கு கொசு வீட்டில் இருந்தால் – 10 ஆயிரம் அபராதம்! ஹோட்டலில் இருந்தால் – 1லட்சம் அபராதம்! என்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, திடீர் திடீரென சில நிறுவனங்கள், வீடுகளில் ஆய்வுகள் நடத்தி, அபராதத்தொகை வசூல் செய்யப் பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைகள் குறித்து, சமூக வலைத்தளங்களில் சில நியாயமான கேள்விகளை மக்கள் கேட்டு வருகிறார்கள்! அவற்றில் சில…

* நல்லா இருக்குய்யா உங்க நியாயம்? நீங்க மாநிலத்தை சுத்தமா வைத்திருந்தால் கொசு எப்படியா உற்பத்தியாகும்?

* வீட்டுக்கு வீடு கொசுவை உரம் போட்டா வளர்க்கிறாங்க மக்கள்?

* வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி இப்போ புதிதாக குப்பை வரி என பல பெயர்களில் வரிகளை ஏன்ப்பா வசூல் செய்யுறீங்க? சுகாதாரத்தைக் கூட பராமரிக்க முடியாத வெத்து வேட்டுகளா?!

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

* எந்தெந்த கொசு எப்படி இருக்கும் என்று எவனுக்குடா தெரியும்? எதை வைத்துடா இது டெங்கு கொசு என்று கண்டுபிடித்து அபராதம் போடுவீங்க? இவர்களின் இயலாமையை மறைக்க மக்களை பாடாய்படுத்த போறாங்க!

* ஒரு அரசியல் கட்சியாவது இந்த கேலிக்கூத்தை கண்டித்துள்ளதா?

* இதுல சுகாதார பணியாளர்னு சொல்லிட்டு வீட்டுக்கு உள்ளேயே புகுந்து, நுழைஞ்சிட்டு கேள்வி கேக்குறாய்ங்க… பச்சையா பேசி முதல்ல நாகரீகமாக, கேட்டுட்டு வாங்கனு சொல்லி முதல்ல பள்ளத்துல தேங்கிக் கிடக்குற குப்பைய சுத்தம் பன்னிட்டு சாக்கடைநீர் தேங்காம பாத்துட்டு இரண்டாவது இங்க வாங்கனு சொல்லீட்டேனுங்க!

* பெரும்பாலும் வீட்டுக்கு வந்து பார்ப்பது பெண்கள். அவர்களிடம், ஃப்ளிஸ் ப்ளிஸ் என்று நாம் சொல்வதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை.. பெரிய இம்சையாக இருக்கிறது. தினந்தோறும் காலை 7 மணிக்கு வந்துவிடுகிறார்கள்!

* மாநாகராட்சிகாரன் இம்சை தினந்தோறும் தாங்கவில்லை.. சண்டை போட்டு ஓய்ந்து விட்டேன். குடிக்க பிடித்து வைத்து இருக்கும் ட்ரம்மில் டெய்லி கெமிக்கல் ஊற்றி இம்சை பண்ணுறானுங்க.

* கேட்டை திறந்து உள்ளே வந்து இம்சை பண்ணுறானுக. நானும் திட்டி ஓய்ந்து விட்டேன். அடிப்படை அறிவு இல்லாத அதிகாரிகள். இவர்களிடம் சண்டையிட்டு என்ன செய்ய!!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

* கொசு முட்டைகளை அழிக்குமாம். விஞ்ஞானி எல்லாம் தோற்றுப் போவான். டார்ச் லைட் அடிச்சு பார்க்கிறானுக… கொசு முட்டை இருக்குனு சொல்றானுக.! நேற்று இரவு 12 மணிக்கு மாநகராட்சி குழாயில் வந்த தண்ணீர். மூடி போட்டு வைத்து இருக்கேன். இன்று காலை 6 மணிக்கு இந்த கூத்து. என்னத்த சொல்ல!! ஒருவேள தொறந்துவிடற தண்ணியவே கொசு முட்டையோடத்தான் விடுறாய்ங்களோ?!

* தெளிவான தண்ணில தான் உருவாகும்! வீட்டு முன்னால இருக்கற டயர்… தொட்டி.. இப்டி எதும் போட்டு வச்சா அதுல தேங்கிருக்க தண்ணீல வளரும் அத தான் அப்டி சொல்றாங்க

* எல்லாம் மென்டலா இருப்பானுக போல…! சாலையில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி ஆனா யார்மீது அபராதம் போடுவானுகனு தெரியல?!

* நான் பறவைகளுக்கு மொட்டை மாடியில் பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது வழக்கம். அதைக் கூட வைக்க விடவில்லை! வச்சா 10 ஆயிரம் அபராதம்!

* தமிழ்நாடு முழுவதும் பாழடைந்த பங்களாக்கள் போல சுகாதாரமற்ற பல அரசு அலுவலகங்கள் உள்ளன. அங்குதான் அனைத்து ஜாதி கொசுக்களும் உற்பத்தி ஆகின்றன. திறந்தவெளி சாக்கடையில் இருந்தா யாரிடம் வசூல் பண்ணுவாங்க?
சாக்கடைய சுத்தம் செய்ய வக்கில்லல!

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories