December 5, 2025, 10:03 PM
26.6 C
Chennai

டெங்குவை உற்பத்தி செய்யும் அரசுத் துறைகளுக்கு அபராதம் விதிப்பது யார்?

dengue musquto - 2025

டெங்கு கொசு அபராத விதிப்பில், அரசின் போங்கு ஆட்டம் நன்றாக வெளித்தெரிகிறது. மக்களுக்கு அபராதம் விதிக்கும் அரசுத் துறைகளுக்கு யார் அபராதம் விதிப்பது என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்!

டெங்கு கொசு வீட்டில் இருந்தால் – 10 ஆயிரம் அபராதம்! ஹோட்டலில் இருந்தால் – 1லட்சம் அபராதம்! என்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, திடீர் திடீரென சில நிறுவனங்கள், வீடுகளில் ஆய்வுகள் நடத்தி, அபராதத்தொகை வசூல் செய்யப் பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைகள் குறித்து, சமூக வலைத்தளங்களில் சில நியாயமான கேள்விகளை மக்கள் கேட்டு வருகிறார்கள்! அவற்றில் சில…

* நல்லா இருக்குய்யா உங்க நியாயம்? நீங்க மாநிலத்தை சுத்தமா வைத்திருந்தால் கொசு எப்படியா உற்பத்தியாகும்?

* வீட்டுக்கு வீடு கொசுவை உரம் போட்டா வளர்க்கிறாங்க மக்கள்?

* வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி இப்போ புதிதாக குப்பை வரி என பல பெயர்களில் வரிகளை ஏன்ப்பா வசூல் செய்யுறீங்க? சுகாதாரத்தைக் கூட பராமரிக்க முடியாத வெத்து வேட்டுகளா?!

* எந்தெந்த கொசு எப்படி இருக்கும் என்று எவனுக்குடா தெரியும்? எதை வைத்துடா இது டெங்கு கொசு என்று கண்டுபிடித்து அபராதம் போடுவீங்க? இவர்களின் இயலாமையை மறைக்க மக்களை பாடாய்படுத்த போறாங்க!

* ஒரு அரசியல் கட்சியாவது இந்த கேலிக்கூத்தை கண்டித்துள்ளதா?

* இதுல சுகாதார பணியாளர்னு சொல்லிட்டு வீட்டுக்கு உள்ளேயே புகுந்து, நுழைஞ்சிட்டு கேள்வி கேக்குறாய்ங்க… பச்சையா பேசி முதல்ல நாகரீகமாக, கேட்டுட்டு வாங்கனு சொல்லி முதல்ல பள்ளத்துல தேங்கிக் கிடக்குற குப்பைய சுத்தம் பன்னிட்டு சாக்கடைநீர் தேங்காம பாத்துட்டு இரண்டாவது இங்க வாங்கனு சொல்லீட்டேனுங்க!

* பெரும்பாலும் வீட்டுக்கு வந்து பார்ப்பது பெண்கள். அவர்களிடம், ஃப்ளிஸ் ப்ளிஸ் என்று நாம் சொல்வதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை.. பெரிய இம்சையாக இருக்கிறது. தினந்தோறும் காலை 7 மணிக்கு வந்துவிடுகிறார்கள்!

* மாநாகராட்சிகாரன் இம்சை தினந்தோறும் தாங்கவில்லை.. சண்டை போட்டு ஓய்ந்து விட்டேன். குடிக்க பிடித்து வைத்து இருக்கும் ட்ரம்மில் டெய்லி கெமிக்கல் ஊற்றி இம்சை பண்ணுறானுங்க.

* கேட்டை திறந்து உள்ளே வந்து இம்சை பண்ணுறானுக. நானும் திட்டி ஓய்ந்து விட்டேன். அடிப்படை அறிவு இல்லாத அதிகாரிகள். இவர்களிடம் சண்டையிட்டு என்ன செய்ய!!

* கொசு முட்டைகளை அழிக்குமாம். விஞ்ஞானி எல்லாம் தோற்றுப் போவான். டார்ச் லைட் அடிச்சு பார்க்கிறானுக… கொசு முட்டை இருக்குனு சொல்றானுக.! நேற்று இரவு 12 மணிக்கு மாநகராட்சி குழாயில் வந்த தண்ணீர். மூடி போட்டு வைத்து இருக்கேன். இன்று காலை 6 மணிக்கு இந்த கூத்து. என்னத்த சொல்ல!! ஒருவேள தொறந்துவிடற தண்ணியவே கொசு முட்டையோடத்தான் விடுறாய்ங்களோ?!

* தெளிவான தண்ணில தான் உருவாகும்! வீட்டு முன்னால இருக்கற டயர்… தொட்டி.. இப்டி எதும் போட்டு வச்சா அதுல தேங்கிருக்க தண்ணீல வளரும் அத தான் அப்டி சொல்றாங்க

* எல்லாம் மென்டலா இருப்பானுக போல…! சாலையில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி ஆனா யார்மீது அபராதம் போடுவானுகனு தெரியல?!

* நான் பறவைகளுக்கு மொட்டை மாடியில் பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது வழக்கம். அதைக் கூட வைக்க விடவில்லை! வச்சா 10 ஆயிரம் அபராதம்!

* தமிழ்நாடு முழுவதும் பாழடைந்த பங்களாக்கள் போல சுகாதாரமற்ற பல அரசு அலுவலகங்கள் உள்ளன. அங்குதான் அனைத்து ஜாதி கொசுக்களும் உற்பத்தி ஆகின்றன. திறந்தவெளி சாக்கடையில் இருந்தா யாரிடம் வசூல் பண்ணுவாங்க?
சாக்கடைய சுத்தம் செய்ய வக்கில்லல!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories